Tuesday, December 2, 2008

மும்பை அட்டாக் : முஸ்லீம் அமைப்புகள் கண்டனம்

மும்பை தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனக்குரல்கள் வந்துகொண்டிருக்கிறது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அம்மத்தைச் சேர்ந்தவர்களும் கண்டனகுரல் கொடுத்திருக்கிறார்கள். முஸ்லீம் அமைப்பான அகில இந்திய சிறுபான்மையினர் முன்னனியின் தேசியத்தலைவர் எஸ்.எம்.ஆஸிப்,’மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள். இஸ்லாத்தில் பயங்கரவாதத்துக்கு ஒரு போதும் இடமில்லை.
பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த பாதுகாப்பு படையினரின் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன். பயங்கரவாதிகள் பிடியிலிருந்து மும்பை நகரை மீட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதலுக்கு மேலும் பல இஸ்லாம் அமைப்புகளும் கண்டனக்குரல் கொடுத்திருக்கின்றன

No comments: