Saturday, December 20, 2008

புஷ்ஷுக்கு செருப்படி!இராக்கில் உச்சகட்ட மரியாதை!!











அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு வீர பூமியான ஈராக்கில் கிடைத்துள்ள வழியனுப்பு மரியாதை(!) பூமிப் பந்தெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அடிமேல் அடிவாங்கிய நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபருக்கு ஈராக்கில் கிடைத்த உச்சக்கட்ட அவமானம் அந்நாட்டு மக்களின் விடுதலை வேட்கைக்கு சான்று கூறுவதாக அமைந்தது. ஈராக்கில் அமெரிக்கப் படைகள் 2011ஆம் ஆண்டு வரை இருப்பதற்கான ஒரு அடிமை சாசனத்தை பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் தனது அடிமைகளான ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி மற்றும் அதிபர் ஜலால் தலபானி இருவரின் முன்னிலையிலும் நிறைவேற்றி அதுகுறித்து உரையாற்றும் போது அதிபர் புஷ் செருப்படி வாங்கினார்.


பத்திரிகையாளர் சந்திப்பில் புஷ் உரையாற்றும் போது அல் பக்தாதியா தொலைக்காட்சி சேனலின் செய்தியாளர் முன்ததர் அல் ஜைதி ஆவேசமாக எழுந்து “ஈராக் மக்களின் வழியனுப்பு முத்தம் இது நாயே’’ என அரபி மொழியில் சிங்கமென கர்ஜித்து தனது ஷூவை வீசினார். ஈராக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக, பாதிக்கப்பட்ட விதவைகளுக்காக, அநாதைகளுக்காக என கூறிக்கொண்டே அடுத்த ஷூவையும் அந்த மாவீரன் (ஷூவீரன்) முன்ததர் வீசினார். அந்த ஷூவின் அளவு 10 என்பது தெரிய வந்துள்ளது. புஷ்ஷுக்கு கிடைத்துள்ள உச்சபட்ச மரியாதை (!) உலகெங்கும் மகிழ்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக கொடுங்கோலர்களின் வரிசையில் முதலிடம் பெறும் ஜார்ஜ் புஷ்ஷை இனி ஜார்ஜ் புஷ்-ஷூ என யாராவது அழைத்தால் அவர் வெறுப்படையக் கூடும். பேரிலேயே ஷூவை வைத்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வெறியனுக்கு கிடைத்த ஷூ மரியாதை (!) ஒரு தொடக்கம் என்றே கருதப்படுகிறது.



Tuesday, December 2, 2008

மும்பை அட்டாக் : முஸ்லீம் அமைப்புகள் கண்டனம்

மும்பை தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனக்குரல்கள் வந்துகொண்டிருக்கிறது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அம்மத்தைச் சேர்ந்தவர்களும் கண்டனகுரல் கொடுத்திருக்கிறார்கள். முஸ்லீம் அமைப்பான அகில இந்திய சிறுபான்மையினர் முன்னனியின் தேசியத்தலைவர் எஸ்.எம்.ஆஸிப்,’மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள். இஸ்லாத்தில் பயங்கரவாதத்துக்கு ஒரு போதும் இடமில்லை.
பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த பாதுகாப்பு படையினரின் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன். பயங்கரவாதிகள் பிடியிலிருந்து மும்பை நகரை மீட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதலுக்கு மேலும் பல இஸ்லாம் அமைப்புகளும் கண்டனக்குரல் கொடுத்திருக்கின்றன

Friday, November 28, 2008

ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பிலும் தொடர்பு! பெண் சாமியார் சிக்குகிறார்!!







மாலேகான் குண்டுவெடிப்பு தொடர் பாக குற்றம்சாட்டப்பட்ட பெண் பயங்க ரவாதி பிரக்யாசிங் மற்றும் ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னல் புரோஹிதர் என்ற அதிகாரி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் சிலரும் சதிச்செயலில் தொடர்பு டையவர்களாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இந்தியாவை பரபரப்பில் ஆழ்த்தின.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தீவிரவாத தடுப்புப் படையினரும் இவர் களை கண்காணித்தே தீரவேண்டிய நிலைக்கு அவர்களின் பயங்கரவாதச் செயல்களின் விளைவு இருந்தது. சங் பரிவார் சதிவலைப் பின்னல்கள் இந்தியா முழுவதும் பரவி நாட்டையே அபாயத்தில் கொண்டு சென்றுள்ளதாக நடுநிலை யாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியான பெண் சாமி யாரை ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிக்க விரும்பு வதாக ஆந்திர மாநில காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஹிந்துத்துவ பயங்கரவாத ஆக்டோபஸ் கரங்கள் இந்தியா முழுவதும் நீண்டுள்ள தகவல்கள் நாட் டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிப்பு நிகழ்ந் தது. ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் தொழுகை செய்யும் அந்தப் பள்ளி வாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த் தியது, அதில் பலர் பலியானார்கள். பதற்றம் அடைந்த மக்கள் அங்கு மிங்கும் ஓடினர். ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடக்க காவல்துறை கொடூரமான முறைகளைக் கையாண் டது. முஸ்லிம் இளைஞர்கள் மூர்க்கத் தனமாக தாக்கப்பட்டனர். குண்டுவெடிப் பில் இறந்தவர்களை விட அதிகமாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்த வர்களே அதிகம் என்ற நிலை ஏற்பட்ட தால் மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளிவாசலில் குண்டுவெடித்தால் என்ன? அதற்கும் முஸ்லிம் இளைஞர் களைத்தான் வளைத்துப் பிடிப்போம், ஏனெனில் சொந்த வீட்டில், ஏன் தனக்குத் தானே குண்டு வைத்துக் கொள்ளும் கோமா ளிக் கிறுக்கர்களா கவே முஸ்லிம் களைக் கருதுகி றோம் என சொல்லா மல் சொல்லும் வித மாக முஸ்லிம் களைத் துன்புறுத் தும் கொடுமையையும் ஆந்திர காவல் துறையினர் நிகழ்த்தினார்கள். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அறி வித்த டாக்டர் ராஜசேகர ரெட்டியின் இமேஜ் பொடிப் பொடியாய் நொறுங் கியது. குஜராத் இனப் படுகொலையை தவிர்த்து விட்டுப் பார்த்தால் முஸ்லிம் களைக் கருவறுக்கும் வேலைகளை செய்வதில் இந்திய மாநிலங் களிலேயே முதலிடத்தை மகாராஷ்டிர மாநில அரசும், இரண்டாவது இடத்தை ஆந்திராவும் பெற்று விட்ட தாக அன்றே மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந் தனர். உண்மை அறியும் குழுவினரைக் கூட கைது செய்து கொடுமை செய்யும் அளவுக்கு ஆந்திர அரசின் மூர்க்கத் தனம் இருந்தது. ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு செல்லும் போக்கு உண்மைக் குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்து டன் இல்லை என நடு நிலையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் முஸ்லிம்கள் நிறைந்த மாலேகானில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. பள்ளிவாசல் களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. முஸ்லிம்கள் அதிகமாக பலியான நிகழ் விலும் கூட முஸ்லிம்களை பலிகடா வாக்கிய கொடூரங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து மக்களின் நம்பிக்கை தகர்ந் தது. இந்த நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சங்பரிவார் பயங்கரவாதி பெண் சாமியார் பிரக்யாசிங் மற்றும் முன்னாள், இந்நாள் ராணுவ அதிகாரிகளின் கைவரிசை இருப்ப தாக செய்திகள் வெளிவரத் தொடங்கி யதை அடுத்து மகாராஷ்டிர மாநில தீவிர வாத தடுப்புப் படையின் அதிரடி புலனாய்வின் சிக்கிய சங்கும்பல் தீவிர விசா ரணை வளையத்தில் சிக்கியது.
அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப் பிலும் இந்த காவி பயங்கரவாதிகளின் தொடர்பு இருக்கலாம் என பூர்வாங்க சந் தேகத்தை ஆந்திர காவல்துறை எழுப்பியதோடு, அது குறித்த விசாரணையிலும் குதித்திருக்கிறது. இதற்காக பெண் சாமியார் பிரக்யா சிங் விசாரிக்கப்படுவார் என ஆந்திர காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இது குறித்து மும்பை சென்று மகாராஷ்டிர காவல்துறை அதிகாரிகளை சந்தித்து புலனாய்வு குறித்து தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியா கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பெண் சாமியார் உள்ளிட்ட சங்பயங்கரவாதிகள் ஆந்திர காவல்துறையினரால் விசாரிக்கப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கிடுக்கிப் பிடிக்குள் வி.ஹெச்.பி.
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக சங்பரி வார் சதிகாரர்கள் தொடர்ந்து சிக்கிவரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மகாராஷ்டிர மாநில காவல் துறையினர் தீவிர புலனாய்வில் இறங்கியிருப்பதாக தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்திருக்கிறார். முன்னாள் ராணுவ புல்லுருவி குல்கர்னியுடன் குஜராத் மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களுடனான சதித் தொடர்பு குறித்தும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததை யடுத்து குஜராத் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் தீவிர விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பில் தொகாடியாவுக்கு தொடர்பு! சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!


இந்திய நாட்டின் இறையாண்மைக்கு கெடுதல் விளைவிக்கும் செயலை நாளும் இழைத்து வரும் சங் பரிவார் கும்பலின் சதிச் செயல்கள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் உள்ளன.



தாங்கள் சுத்த யோக்கியர்கள் போலும் தேசப் பற்றுக்கே நாங்கள்தான் சான்றி தழ் வழங்குவோம் என்றும் தருக்குடன் கூறிக் கொண்டிருந்தவர்கள், தங்க ளைத் தவிர மற்றவர்கள் மீது சந்தேகம் தோன்றும் வண்ணம் துவேஷக் கதை களை பரப்பி வந்தனர்.



அப்பாவி இந்துக்களை ஏமாற்று வதையே கடந்த அறுபதாண்டுகளாக தொடர்ந்து வந்தனர். அதனால் நாடெங் கும் பெரும் வன்முறைகளை நிகழ்த்தி னர். வன்முறைகளில் நாட்டின் பெரு மைக்கு சான்றாக விளங்கிய முஸ்லிம் கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.



இந்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றிய அந்த சமூகம் குற்றப் பரம்பரை யினர் போல் நடத்தப்பட்டனர்.



ஊடகங்களும் கூட இந்த பாரபட்ச போக்கை கவனம் பிசகாது கடைப்பிடித்தன.



சத்தியம் ஒருநாள் வென்றே தீரும் என்பதை நிரூபிக்கும் விதமாக சமீப கால நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.



செப்டம்பர் 29ல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு சதிச் செயல் தொடர் பாக சங் பரிவார் சதிகாரர்கள் வகையாய் மாட்டிக்கொண்டனர்.



பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடு வான் என்ற பழமொழிக்கேற்ப சங் பயங்கரவாதிகள் தொடர்ந்து சதிச் செயல் தொடர்பாக மகாராஷ்ட்ர மாநில தீவிரவாத தடுப்புப் படையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர்.



காலகாலமாக பரப்பப்பட்ட கட்டுக் கதைகள் அம்பலமாயின. சங் பரிவார் சதிகாரர்கள் இந்நாட்டையும் மக்களையும் எந்த அளவு ஏமாற்றியிருக்கின்றனர் என்பது தெளிவானது. இந்தியாவே அதிர்ச்சியில் உறைந்து போனது.



இவர்கள் தங்களது பிற்போக்குத்தன மான மதவெறியை, இழிவான முறையில் பரப்பினர்.



சாமியார்கள் பயங்கரவாத சாமியார் களாக மாறினர். ராணுவத்திலும் கூட பயங்கரவாத நச்சு சிந்தனைகள் ஊடுரு வின. உத்வேகம் பெற்றன. ஓய்வு பெற்ற உபாத்யாய்கள், சமீர் குல்கர்னிகள் போதாதென்று பணியிலிருக்கும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹிதுகள் அப்பாவிகளை குண்டு வைத்து கொலை செய்து நாட்டையே அவமானத்தில் ஆழ்த்தியிருக் கிறார்கள்.



சங்பரிவார் சதிவலைகள் தொடர்ந்து வரும் நிலையில் விடிந்தால் எந்த சங் கும்பல் தலைவன் சிக்குவானோ என்று மக்கள் தினமும் ஆவலாய் எழுகின்றனர்.


பெண் சாமியார் பிரக்யாசிங் போன்ற வர்கள் அப்பாவி மக்களின் ஆன்மீக பலவீனங்களை பயன்படுத்தி தீவிர வாதத்தை வளர்த்தனர்.


இந்நிலையில் இதுவரை பெரிய முத லைகள் சிக்காத நிலையே நீடித்தது. சில்லறை தேவதைகள் மட்டுமே பிடிபட்ட நிலையில் முதன்முறையாக ஒரு காவி முதலை, திரிசூலம் தூக்கும் ஒரு ரவுடிக் கும்பலின் தலைவனும் மாலேகான் சதி வழக்கில் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரவிண் தொகாடியா என்ற அந்த விஷ பிரமுகர், தனது குதர்க்க புத்தியால் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தார்.


மதவெறி கூட்டங்களில் திரிசூலங் களை பகிரங்கமாக வழங்கி வன்முறை கொப்பளிக்க பேசியவர், திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிம்களையும் மற்றொரு முனை கிறிஸ்தவ மக்களையும் மூன்றா வது முனை சமாதானம் பேசும் ஹிந்துக் களையும் கொல்வதற்கு என்று ஏகடியம் பேசியவர் அந்த புண்ணியவான்(!) தற்போது மாலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவர் என்றும் முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொலை செய்ய கொள்ளை கொள்ளையாய் பணம் அள்ளிக் கொடுத்தவர் என்றும் தீவிரவாத தடுப்புப்படை இவரைப்பற்றி தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து தொகாடியாவை தூக்கில் போடு என இந்தியாவெங்கும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வி.ஹெச்.பி. அமைப்பில் இருந்து விலகிய சாமியார்


உ.பி. யைச் சேர்ந்த சாமியார் லட்சுமி சங்கர் ஆச்சாரியா, இவர் விசுவ இந்து பரிசத் அமைப்பில் தீவிர உறுப்பினராகவும் பிரச்சாரகராகவும் செயல்பட்டு வந்தார். பிறகு மனம் திருந்தி அந்த அமைப்பில் இருந்து விலகி விட்டார். இஸ்லாம் தீவிர வாதமா அல்லது சாந்தியா? என்ற தலைப்பில் இவர் இந்தியில் ஒரு நூல் எழுதியுள்ளார். இந்த நூலில் இஸ்லாம் அமைதியை நிலைநாட்டும் மார்க்கம் என்பதை தெளிவாக அவர் எடுத்துக் காட்டியுள்ளார். விரைவில் வெளிவரவுள்ள அந்த நூலின் பிரதியை தமுமுக தலைவரிடம் லக்னோ அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில் அளித்தார். அருகில் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் சுலைமான் (வலது புறம்) உள்ளார்.

Saturday, November 22, 2008

டிசம்பர் 6-ல் ரயில் மறியல் போராட்டம்! இந்தியா முழுதும் போராட்டத்தை விரிவுப்படுத்த முயற்சி!!தலைமைக் கழகம் அறிவிப்பு!!போர்கால அடிப்படையில் பணிகள் தொடக்க


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு நவம்பர் 7 அன்று சென்னையில் நடை பெற்றது. பேராசியர் டாக்டர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலை மையில் நடைபெற்ற தலைமை நிர்வாகி களும், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச் செயலாளர்களும் கலந்துக் கொண்டனர்.


இதில் டிசம்பர் 6-ல் என்ன வகையான போராட்டத்தை அறிவிப்பது என்று ஆலோ சிக்கப்பட்டது. பல்வேறு ஆலோசனை களில் இறுதியாக ரயில் மறியல் போராட்டத்தை வீரியத்தோடு நடத்து வது என்று முடிவு செய்யப்பட்டது.


மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் போராட்டங்கள் நடத்துவது என்றும் ரயில்கள் செல்லும் ஊர்களில் மறியல் நடத்துவது என்றும், ரயில்கள் இயங்காத இடங்களில் ரயில் நிலையங்கள் செயல்பட்டால் அங்கு முற்றுகைப் போராட்டமாக மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதோடு, பாபர் மஸ்ஜித் போராட் டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்றும் முயற்சியாக, கடந்த 2004 - டிசம்பர் 6-ல் தமுமுக டெல்லியில் பேரணி - மாநாடு நடத்தியதைப் போல, இவ்வருடமும் இந்தியா முழுவதும் போராட்டத்தை விரி வுப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப் படையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தோழமை முஸ்லிம் அமைப்பு களுக்கு கடிதம் எழுதி, அந்தந்த மாநில தலை நகரங்களில் அவர்களின் சக்திகேற்ப போராட்டத்தை நடத்த அறிவுறுத்து வது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கான சுவர் விளம் பரங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட் டிகள், தெருமுனைப் பிரச் சாரங்கள், வாகன ஒலிபெருக்கி பிரச் சாரங்கள், களப் பணி ஆகியவற்றை போர்கால அடிப்படை யில் தொடங்கிட வேண்டும் என இயக்க தோழர் களை தலைமைக் கழ கம் வலியுறுத்தியுள்ளது.
டிசம்பர் 6 ரயில் மறியல் போராட்டம் விளம்பரங்களை எழுச்சியுடன் செய்ய வேண்டும் என்றும், உடனடியாக பணி களை தொடங்க வேண் டும் என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.


(அறிவிக்கப்ட்ட 24 மணி நேரத்தில் சுவர் விளம்பரத்தில் முந்திக் கொண்டது திருச்சி மாநகரம்)

இந்த அறிவிப்பு தமுமுக சகோதரர் களையும் சமுதாய ஆர்வலர்களையும் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தி; அவர் களை வீரியமும், உற்சாகமும் கொள்ள வைத்திருக்கிறது என பல முனை தகவல்களும் தெரிவிக்கின்றன.

Thursday, November 20, 2008

அத்வானிதான் பெரிய தீவிரவாதி! சீறுகிறார் லாலு


ஹிந்துத்துவ பயங்கரவாதம் குறித்து நாளொரு தகவலும் பொழு தொரு மர்மங்களும் அம்பலமாகி வரும் நிலையில் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த ஆத்திரமும் சங்பரிவார் சதிகாரக் கூட்டத்தின் மீது திரும்பியுள்ளது.

சமூக நல்லிணக் கத்திற்காக பாடுபடும் இயக்கங்கள் அனைத்தும் சங்கும்பல் சதி காரர்களைக் கண்டித்து தங்கள் எதிர்ப்பினை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் விசாரணை வளையத்தில் வைக்கப் பட்டுள்ள சங் பயங்கர வாதிகளுக்கு மறைமுக ஆதரவு வழங்கும் பாரதீய ஜனதா கட்சியின் மீதும் மக்களின் வெறுப்பு திரும்பி யுள்ளது. இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியினரை தீவிரவாதக் கூட்டம் என்றும் அக்கட்சியின் பிரதமர் வேட் பாளர் எல்.கே. அத்வானி மிகப்பெரிய தீவிரவாதி என்றும் ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் போட்டு உடைத்திருக்கிறார்.

பாஜக தீவிரவாதக் கூட்டம் என்றும் அது நாட்டு மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதாகவும் கூறிய சமூக நீதித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இந்தத் தீவிரவாதிகள் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலைகள் தான் என்றும் வெளுத்து வாங்கியுள்ளனர்.

அகில இந்திய தொலைக்காட்சி சானல்களில் மாலே கான் விவகாரம் குறித்த விவாதங்கள் எழும்போதெல்லாம் பாஜக வகையாறக்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடிவரும் நிலையில் ரயில்வேத் துறை அமைச்சர் லாலுவின் அதிரடி அறிவிப்பு சங் முகாமில் அலறலை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, November 5, 2008

குண்டு வைக்க நிதி திரட்டும் சங்பரிவார் தொடரும் உண்மைத் தகவல்கள்


நாட்டில் இதுவரை நிகழ்ந்த தீய செயல்கள் அனைத்திற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூலகாரண மாக விளங்குவது சங்கும்பல் என்ற சதிகாரக்கூட்டம் என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று.


காந்தியாரின் படுகொலை முதல் மாலேகான் குண்டுவெடிப்பு வரை இந்த சக்திகளின் சதிகள் அம்பலமாகின.


இருப்பினும், சங்பரிவார் சக்திகளின் அரசியல் மற்றும் ஊடக பலத்தின் காரணமாக அதை சிறியதாக்கிக் காட்டு வதும், மறைப்பதும், மழுப்புவதும் அவர் களது வழக்கமான தந்திரமாகவே இருந்து வந்திருக்கிறது. காந்தியடி களைப் படுகொலை செய்துவிட்டு கொலையாளிக்கும் எங்கள் அமைப்புக் கும் தொடர்பில்லை என்று கூறிக் கொண்டே கொலையாளி கோட்சேயின் அஸ்தியை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கும் இவர்கள் அதனை பெருமையாகவும் கூறிக் கொள்வார்கள். பாபரி மஸ்ஜிதை இடித்து இந்தியா வின் மாண்பை குலைத்ததோடு மட்டு மல்லாமல் பாபரி மஸ்ஜிதை இடித்ததற் காக பெருமைப்படுவதாக சிவசேனை கட்சியின் தலைவர் பால்தாக்கரே கொக்கரித்தார். இவ்வாறு தேசத் துரோக மனிதகுல விரோத தகவல் களைத் தொடர்ந்து அவர்கள் தங்களது வக்கிரப் புத்தி கலந்த பயங்கரவாதத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.


மாலேகானில் நோன்புப் பெரு நாளுக்கு முந்தைய நாள் முஸ்லிம்கள் மகிழ்ச்சியோடு இந்த ஆண்டின் கடைசி நோன்பினைத் துறக்கும் வேளையில் குண்டுவைத்து கொலை செய்த பாதகங்களில் முக்கியமானவர்களாக, பெண் சாமியார் பயங்கரவாதி பிரக்யா சிங் தாகூர், மற்றும் ஓய்வுபெற்ற இரண்டு ராணுவ அதிகாரி உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.


நாசிக்கில் உள்ள போன்சலா ராணுவ பயிற்சிக் கூடத்தில் குண்டுகள் வைப் பதற்கும் அப்பாவி முஸ்லிம்களை எவ்வாறு கொலை செய்வது என்பது குறித்தும் சதி பயிற்சிகள் நடைபெற்று வந்ததாக தீவிரவாதத் தடுப்புப் படை கூறிவரும் நிலையில் அந்த பயங்கர வாதிகளை ஆதரிக்க வேண்டும் என்றும், அரவணைக்க வேண்டும் என்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா வில் தலையங்கத்தில் பயங்கரவாதத் திற்கு பால் வார்க்கும் விதமாக விஷமக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். பயங்கரவாதி பிரக்யாசிங் உள்ளிட்ட வகையறாக்களை யாரும் கைவிட்டு விடக் கூடாது என்றும், அவர்களின் செயல் குறித்து பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார் பால்தாக்கரே. அதோடு பொதுநிதி கொடுத்து அந்த பயங்கர வாதிகளை வாழவைக்க வேண்டும் என்றும் பால்தாக்கரே கூறியுள்ளார். அவர்களை நிதி கொடுத்து காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ்.ஸும் வாக்குறுதி கொடுத் தது. இதையெல்லாம் குறிப்பிட்டு, இதில் தவறு ஒன்றும் இல்லை என பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கார் தெரிவித்திருக்கிறார்.


இவர்கள் இருக்க வேண்டிய இடம் தீவிரவாத தடுப்புப் படையின் கட்டுப் பாட்டில்தான். என்ன செய்கிறது மத்திய அரசு

Tuesday, November 4, 2008

இந்துத்துவ பயங்கரவாதமும் சிறுபான்மையினரின் அணுகுமுறையும்...











இந்துத்துவ பயங்கரவாதமும் சிறுபான்மையினரின் அணுகுமுறையும்...

-பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்






அரசியல் சாசனச் சட்டத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை

தங்களது இந்துத்துவக் கோட் பாட்டை நிலைநாட்டுவதற்குப் பாடுபடா தவர்களை கோல்வால்கர் துரோகிகள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் கோல்வால்கரும் அவரைச் சார்ந்த வர்களும் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் எவ்விதப் பங்கும் கொள்ளவில்லை. இது மட்டுமல்ல, வெள்ளைக்கார அரசின் சட்டங்களை மதித்து அதற்குக் கட்டுப் பட்டு நடப்பதாக எழுதிக் கொடுத்தவர் தான் கோல்வால்கர்.


இப்படித் துரோகம் செய்தவர்கள் நமது நாட்டின் அரசியல் சாசனச் சட்டத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. அரசியல் சாசனச் சட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது கோல்வால்கர் பின் வருமாறு எழுதுகிறார்:


“துரதிருஷ்டவசமாக நமது நாட்டின் அரசியல் சாசனச் சட்டம் மண்ணின் மைந்தர்களையும் ஆக்கிரமிப்பாளர் களையும் சமமாக்கியுள்ளது. எல்லோருக் கும் அது சம உரிமை அளித்துள்ளது. ஒரு வீட்டில் தனது பிள்ளைகளுக்கும் திருட வந்தவர்களுக்கும் இடையே ஒரு மனிதன் சமமான உரிமையை அளித்து தனது சொத்தையும் அவர்கள் அனை வருக்கும் பகிர்ந்தளிப்பது போன்று அரசியல் சாசனச் சட்டத்தின் இந்த நிலைப்பாடு உள்ளது’’.


இந்துத்துவக் கோட்பாட்டைப் பிரதி பலித்துச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். ஒரு பாசிச அமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை என்பதை கோல்வால்கரின் கருத்துக்களும் அதனை நடைமுறைப் படுத்தும் வகையில் சங்பரிவார அமைப்பு களும் செயல்படுவதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஹிட்லரி னால் தான் மிகவும் கவரப்பட்டதாக கோல்வால்கர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். நமது நாட்டில் தன்னி கரில்லாத வகையில் சமூகச் சேவை செய்யும் கிறிஸ்தவர்கள் பற்றி கோல்வால் கர் எழுதியுள்ள பின்வரும் கருத்துகள் அவரது பாசிச உணர்வுகளைத் தெளி வாக வெளிப்படுத்துகின்றது.


“மேலோட்டமாகப் பார்க்கும் ஒரு வருக்கு கிறிஸ்தவர்கள் தீங்கிழைக் காதவர்கள் போலவும், இரக்கத்தின் வடிவமாகவும், மனிதகுலத்தின் மீது தீராத அன்பு கொண்டவர்கள் போன்றும் காட்சி அளிக்கிறார்கள். அவர்களது பேச்சுகளில் சேவை, மனிதர்களை இரட்சித்தல் போன்ற வார்த்தைகள் நிரம்பி இருக்கின்றன. எல்லாம் வல்ல வனாகிய இறைவனால் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்காகவே இவர்கள் பிரத்யேகமாக அனுப்பப்பட்டுள்ளது போன்று அவர் கள் தோற்றம் அளிக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அநாதை நிலையங்கள் மற்றும் மருத்துவமனை களை நடத்துகிறார்கள். நம் நாட்டு மக்கள் சாமானியர்கள் என்பதால் இதனால் கவரப்பட்டு விடுகிறார்கள். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளுக் காக கோடிக்கணக்கான ரூபாய்களை கிறிஸ்தவர்கள் கொட்டுவதற்கான உண்மை நோக்கம் என்ன?


நமது நாட்டில் வாழும் கிறிஸ்தவ மக்களின் செயற்பாடுகள் இப்படித்தான் உள்ளன. நமது நாட்டின் சமூக மதக் கட்டமைப்பைச் சிதைப்பது மட்டும் அவர்கள் நோக்கமல்ல, பல்வேறு பகுதிகளில் - முடிந்தால் நாடு முழுவதும் தமது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஏசு நாதரின் தெய்வீக இறக்கையின் கீழ் மனிதகுலத்திற் கிடையே சமாதானம் மற்றும் சகோதரத்து வத்தை ஏற்படுத்துகிறோம் என்ற கவர்ச்சிகரமான போர்வையில் அவர்கள் செல்லுமிடமெல்லாம் இதனைச் செய்து வருகிறார்கள்’’. என எழுதியுள்ளார்.




மதமாற்றம் பற்றி...


தன்னலமற்ற முறையில் சேவை செய்து வந்த பாஸ்டர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் போன்ற சமூக சேவகர்கள் ஈவிரக்கமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்படுவதற்கான பயங்கரவாதத் தின் ஊற்றாக கோல்வால்கரின் இந்த எழுத்துக்கள் அமைந்துள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா வில் வாழும் அனைத்து மக்களும் கண்ணியத்துடன் வாழ வேண்டு மெனில் இந்து கலாச்சாரத்தையும் மதக்கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ள கோல் வால்கர், மதம் மாற்றம் பற்றி எழுதியுள்ள பின்வரும் கருத்துகளும் அவரது பாசிச சிந்தனைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.


“இந்துக்கள் மற்ற மதங்களுக்கு மாறுவது அவர்கள் நாட்டின் மேல் கொண்ட மாசற்ற விசுவாசத்தைச் சிதைத்து விடுகின்றது. அது நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. எனவே மதமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகவும் அவசியமாகும். ஒரு தனி நபர் மதம் மாறுவது என்பது அவர் பல்வேறு தத்துவங்களை ஆய்வு செய்த பின் நடைபெறுவது அல்ல. வறுமை, எழுத் தறிவின்மை மற்றும் அறியாமையைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் ஆசைகளை ஊட்டித்தான் மதமாற்றம் நடைபெறுகின்றது. உண்மையான மன மாற்றத்தினால் மதமாற்றம் நடை பெறுகின்றது என்று கூற இயலாது. இந்த அநீதியான நடவடிக்கையைத் தடை செய்வதுதான் சரியான நட வடிக்கையாக இருக்கும். அறியாமை மற்றும் வறுமையில் வாடும் நமது சகோதரர்களைப் பாதுகாக்க மத மாற்றத்தைத் தடைசெய் வது நமது கடமையாகும்’’.


சாதியத்தை போற்றும் கோல்வால்கர்


இந்துத்துவத்தின் சாதிய கட்டமைப்பினால் சிக்குண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைப் பெறு வதற்கு இஸ்லாத்திற்கோ கிறிஸ்தவத்திற்கோ மதம் மாறினால் இந்துத்துவம் அதனை வேடிக்கை பார்க் கக் கூடாது என்பதை கோல்வால்கரின் இந்தக் கூற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. சாதிய கட்டமைப்பை தனது எழுத்துக் களில் இந்துத்துவத்தின் பிதாம கன் கோல்வால்கர் புகழ்ந்து தள்ளியுள் ளார். அவர் எழுதுகிறார்:


பண்டைய காலத்திலும் சாதிகள் இருந்தன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்து நிலைத்த நமது சிறப்புமிகு தொன்மையான தேச வரலாறு முழுவதும் சாதிகள் இருந்துள் ளன. நமது சமுதாயத்தின் ஒற்றுமை யையோ அல்லது நமது நாட்டின் முன்னேற்றத்தையோ தடுக்கும் வகை யில் சாதிய அமைப்பு செயல்பட்டது என்று எங்கும் எந்தவொரு நிகழ்வையும் நாம் காட்ட முடியாது. உண்மையில் அது சமூக ஒற்றுமைக்கு வலு சேர்த்துள்ளது.


திட்டமிட்டு பொய்களைப் பரப்பி மக்களை நம்ப வைப்பது தான் பாசிசத் தின் வெளிப்பாடு. அதைத்தான் கோல் வால்கரின் இந்தக் கூற்றில் நாம் காண முடிகிறது. இந்துத்துவ சாதிய அமைப்பின் கொடுங்கோன்மைக்கு எதிராகத்தான் பௌத்தமும் சமணமும் தோன்றின என்பதை கோல்வால்கர் எவ்வாறு திட்டமிட்டு மறைத்துள்ளார் என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். இதேபோல் தமிழகத்தில் மீனாட்சிபுரத் தில் தலித் மக்கள் இஸ்லாத்தைத் தழுவியது இந்துத்துவத்திற்கு ஒரு பேரிடியாக அமைந்தது. ஆனால் அதே நேரத்தில் சமீபகால இந்தியாவில் இந்துத்துவம் தனது முழு அகோர வடிவத்தைக் காட்டுவதற்கும் அது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ராமர் கோயில் பிரச்சனையை ஒரு தேசிய பிரச்சனையாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு வெறுப்பு ணர்வை தூண்டி - கலவரத்தைத் தூண்டி தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவம் எப்படியெல்லாம் செயல்பட்டது என்பது நாம் அறிந்த வரலாறு. இதே அடிப்படையில்தான் சமீபத்திய ஒரிசா நிகழ்வுகளையும் நாம் காணவேண்டும். ஒரிசாவில் பழங்குடி மக்கள் கல்வி கற்று தமது சொந்தக் காலில் நிற்பதற்கான முயற்சிகளை கிறிஸ்தவர்கள் செய்தால், அது இந்துத்து வம் பேணிப் பாதுகாக்க நினைக்கும் சாதிய கட்டமைப்பிற்கு எதிராக அமைந்து விடும். எனவேதான் கட்டாய மதமாற்றம் என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது மட்டுமில்லாமல் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும் தேவாலயங்களும் ஒரிசா மட்டுமின்றி தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன.


சங்பரிவாரின் அமைப்பு முறை


பாசிச அமைப்புகள் போன்ற கட்ட மைப்பைக் கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்பின் தலைவர் `சரசங் சலாக்’ என்று அழைக்கப்படுகிறார். காரியக்காரி சமிதி (செயற்வீரர்கள் குழு) என்று அழைக்கப் படும் ஒரு உயர்மட்டக் குழுவை அவர் நியமிக்கிறார். இது அவ ருக்கு உறு துணையாக இருக்கிறது. பிர தேஷ் பராமுக் என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைவர் உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படை கிளை ஷாகா என்று அழைக்கப்படுகின் றது. நாடு முழுவதும் 60,000 ஷாகாக்கள் செயல்படுகின்றன. இவை காலை அல்லது மாலை தினந்தோறும் செயல்படுகின்றன. காலையில் செயற்படும் ஷாகாக்கள் வணிகர்களுக்கும் மாலையில் செயற்படு பவை மாணவர் களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் உரியதாக உள்ளன. இந்த ஷாகாக்கள் பொது இடங்களில் செயற்படுகின்றன. இந்த ஷாகாக்களில் உறுப்பினர்களாகச் சேருபவர்கள் சுயம் சேவக் என்று அழைக் கப்படுகிறார்கள். இவர்களில் குழுத் தலைவர் முக்கிய சிக்சாக் (தலைமை ஆசிரியர்) என்று அழைக்கப்படுகிறார்.


சுயம்சேவக்குகளில் துடிப்பானவர்கள் அதிகாரிகள் பயிற்சி முகாமிற்கு அழைக் கப்படுகிறார்கள். மிகுந்த அர்ப்பணிப்பும் உத்வேகமும் உள்ளவர்கள் பிரச்சாரக் (பிரச்சாரர்களாக) முழு நேரப் பணியாளர் களாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சங் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். இவர்கள் திருமணமும் செய்து கொள்வதில்லை. (வாஜ்பேயி, ராமகோபாலன் போன்றோர் முழு நேரப் பிரச்சாரகர் ஆவர்). இவர்கள் பிரச்சார கர்களாக ஆனவுடன் தங்கள் குடும்பத்தின ருடனான உறவையும் துண்டித்துக் கொள்கிறார்கள். சங் பணிகளுக்காக இவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு அனுப்பப் படுகிறார்கள்.


ஆர்.எஸ்.எஸ். அளிக்கும் பயிற்சி இரண்டு வகைப்படும். ஒன்று உடல்கூறு ரீதியான பயிற்சி. இதில் உடல் பயிற்சிகள் விளையாட்டுகள் அடங்கும், மற்றொன்று பவுதிக் (சிந்தனை ரீதியான பயிற்சி). இந்த சிந்தனை ரீதியான பயிற்சியில் தான் சுயம்சேவக்குகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்.
தனது இந்துத்துவ பாசிச குறிக் கோளை செயல்படுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் பல முகங்களைத் தரித்துள்ளது.


அரசியல் அரங்கில் முதலில் அது உருவாக்கிய கட்சி பாரதீய ஜனசங். இதன் தலைவராக மேற்கு வங்காளத் தைச் சேர்ந்த சியாம பிரசாத் முகர்ஜியை கோல்வால்கர் நியமித்தார். இவர் ஒரு சுயம்சேவக் அல்ல. ஆனால் இவரது தனி செயலாளராக நாவமை மிக்க ஒரு இளைய பிரச்சாரகராக பாரதீய ஜனசங்கத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்தான் அடல் பிகாரி வாஜ்பேயி. வாஜ்பேயி மட்டுமல்லாது இன்னும் ஏராளமான பிரச்சாரகர்கள் பாரதீய ஜன சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் கள். இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது அதனை பல கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தன. அவசர நிலை விலகிய பிறகு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயபிர காஷ் நாராயணனின் முன்முயற்சியால் ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சியுடன் பாரதீய ஜனதா கட்சியும் இணைக்கப்பட்டது. தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்ற பிறகு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட அரசில் வாஜ்பேயி, அத்வானி போன் றோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றார் கள். ஆனால் இவர்கள் ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இருந்த அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் உறுப்பினர்களாக இருந்தார்கள். இந்த இரட்டை உறுப்பினர் நிலையை ஜனதாக் கட்சியில் இருந்த மதுலிமாயி போன்ற சோசலிசவாதிகள் கடுமையாக எதிர்த் தனர். இதன்காரணமாக ஜனதா கட்சியில் இருந்து வாஜ்பேயி உள்ளிட்ட முன்னாள் ஜனசங் கட்சியினர் விலகி 1980ல் பாரதீய ஜனதா கட்சியைத் தொடங்கினார்கள்.


ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அணி யாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பும் தொழிலாளர் அமைப்பாக பாரதீய மஸ்தூர் சங்கும் செயல்பட்டு வருகின்றன. உலகளாவிய அளவில் இந்துத்துவத்தின் ஆதரவாளர் களை ஒருங்கிணைப்பதற்காக விஷ்வ இந்து பரிசத் அமைப்பு தொடங்கப்பட்டது. பெண்களுக்கிடையே இந்துத்துவ பாசிசத்தை வளர்ப்பதற்காக துர்கா வாகினி அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் பெண்களுக்கும் வன்முறைப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இளம்பிஞ்சு களுக்கு மத்தியிலும் இந்துத்துவ பாசிச நஞ்சை விதைப்பதற்காக வித்யா மந்திர் என்ற பெயரில் பள்ளிக்கூடங்களையும் சங்பரிவார் நடத்துகின்றது.


சங்பரிவாரின் மிகவும் பயங்கரமான இரு அமைப்புகளாக பஜ்ரங் தளமும் வனவாசி கல்யாண் கேந்திரமும் அமைந் துள்ளன. கிறிஸ்தவ பிரச்சாரக் குழுக் களை எதிர்கொள்வதற்காக எனக் கூறி வனவாசி கல்யாண் கேந்திரம் அமைக்கப் பட்டுள்ளன. இந்த அமைப்பு பழங்குடி மக்கள் மத்தியில் சேவை செய்வதற் காகத் தனது ஆட்களை அனுப்பிவைக் கின்றது. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ வசதிகளை பள்ளிக்கூட வசதிகள் போன்ற வற்றை இந்த அமைப்பு நிறுவி செயல் பட்டு வருகின்றது. இந்தப் பணிகளைச் செய்யும் அதே நேரத்தில் இந்துத்துவத் தின் கோட்பாடுகளை அவை பழங்குடி மக்கள் மத்தியில் போதிப்பதுடன் மறு மதமாற்றத்திலும் ஈடுபட்டு வருகின்றன. குஜராத், மத்திய பிரதசேம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இந்த அமைப்பின் செயல்பாடுகள் முக்கியக் காரணமாக விளங்கின.


பஜ்ரங்தளம் இந்துத்துவத்தின் மற் றொரு கோர முகமாகும். பள்ளிவாசல் கள், தேவாலயங்கள் முதலிய சிறு பான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது இதன் முக்கிய வேலையாகும். ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு பஜ்ரங் தளத்தை `ஒரு தீவிரவாத அமைப்பு’ என்று வர்ணித்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் ரோஸ் பஜ்ரங் தளத்தினரை நாஜிகளின் அதிரடி வன்கும்பலுக்கு இணையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரிசா கர்நாட கம் போன்ற மாநிலங்களில் தற்போது கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்செயல்களில் முன்னின்று நடத்தி வருவதும் பஜ்ரங்தளத்தினர் தான். மராட்டிய மாநிலம் நான்டெட், கான்பூர் போன்ற நகரங்களில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த போது அவை வெடித்துச் செத்துப் போனவர்களும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான்.


பாசிச இந்துத்துவத்தை திணிப்பதற்காக பல்வேறு கோணங்களில் செயல்பட பின்வரும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன


1. பாரதீய ஜனதா கட்சி (உறுப் பினர்கள் 1 கோடியே 70 லட்சம்)
2. ஆர்.எஸ்.எஸ். (உறுப்பினர்கள் 25 லட்சம்)
3. பாரதீய கிஸான் சங் (விவசாயி கள் சங்கம்) (உறுப்பினர்கள் 80 லட்சம்)
4. பாரதீய மஸ்தூர் சங் (தொழி லாளர் சங்கம்) (உறுப்பினர்கள் 45 லட்சம்)
5. ஆதிவாசி கல்யாண் கேந்திர் (உறுப்பினர்கள் 23 லட்சம்)
6. மீனவர் கூட்டுறவு சங்கம் (உறுப்பினர்கள் 22 லட்சம்)
7. விவேகானந்த் மெடிக்கல் மிஷன் (உறுப்பினர்கள் 17 லட்சம்)
8. அதியபாக் பரிஷத் (உறுப்பினர் கள் 18 லட்சம்)
9. விவேகானந் கேந்திர் (உறுப் பினர்கள் 18 லட்சம்)
10 பாரதீய விகாஸ் பரிஷத் (உறுப் பினர்கள் 18 லட்சம்)
11. தீன்தயாள் சோத் சான்ஸ்தான் (உறுப்பினர்கள் 17 லட்சம்)
12. ராஷ்ட்ரிய சேவிகா சமிதி (பெண்கள் பிரிவு) (உறுப்பினர்கள் 18 லட்சம்)
13. அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (உறுப்பினர்கள் 18 லட்சம்)
14. ஜனதா யுவ மோர்ச்சா (உறுப்பினர்கள் 18 லட்சம்)
15. சிக்கா பாரதி (21 லட்சம்)
16. விஸ்வ இந்து பரிஷத் (28 லட்சம்)
17. இந்து சுயம்சேவக் சங் (வெளி நாட்டு பிரிவு)
18. சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (தேசிய விழிப்புணர்வு முன்னணி)
19. சரஸ்வதி சிசு மந்திர் (பாலர் பள்ளிகளுக்கான அமைப்பு)
20. வித்ய பாரதி (கல்வி நிறு வனங்கள்)
21. வனவாசி கல்யாண் ஆசிரம்
22. பஜ்ரங் தளம் (ஹனுமான் படை)
23. விஞ்ஞான் பாரதி (அறிவியல் அமைப்பு)
24. சங்கல்ப்
25. சன்ஸ்கார பாரதி (கலைஞர் களுக்கான அமைப்பு)
26. சாஹ்கார பாரதி (கூட்டுறவுக் கான அமைப்பு)
27. ஆதிவக்தா பரிஷத் (வழக்குரைஞர்களுக்கான அமைப்பு)
28. வித் சலஹாக்கர் பரிஷத் (கணக் காளர்களுக்கான அமைப்பு)
29. சேவா பாரதி
30 பாரதீய விசார் கேந்திர்


சுருக்கமாகச் சொல்ல வேண்டு மெனில், இந்துத்துவத்தின் விஷ வேர்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரை யும் சென்றடையும் வகையில் திட்டமிட்டு செயல்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அமைப்புகள் சுதந்திர அமைப்புகளாகச் செயல்பட்டு வருகின் றன. இருப்பினும் இந்த அமைப்புகளின் குறிக்கோள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள துறையில் இந்துத்துவத்தை நிலைநாட்டு வதுதான். தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டாலும் மற்ற அமைப்புகள் தமது பணியைத் தொடரும் வகை யில் அவை செயல்பட்டு வருகின்றன.



Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved.

Sunday, November 2, 2008

பத்திரிகை அறிக்கை பயங்கரவாதத்திற்கு பால் வார்க்கும் பால்தாக்கரேவை கைது செய்க!தமுமுக கோரிக்கை!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை


நாட்டை அச்சுறுத்தும் தீவிரவாதத்திற்கு ஆதரவாகவும் பயங்கரவாதத்தின் ஊது குழலாகவும் சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே தனது அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் தலையங்கமாக தீட்டியுள்ள கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.


மாலேகானில் அப்பாவி மக்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தற்போது தீவிர விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டிருக்கும் சங் பரிவார் பயங்கரவாதிகள் பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூர், முன்னாள் ராணுவ அதிகாரிகள் ரமேஷ் உபாத்யாய், சரத், குல்கர்னி மற்றும் தற்போது ராணுவத்தில் பணியிலிருக்கும் ஒரு உயர் அதிகாரி உள்ளிட்ட பயங்கரவாதிகளின் குற்ற செயல்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக தட்டிக் கொடுக்கும் விதமாக பால்தாக்கரே தனது விஷமக் கருத்தை விதைத்திருக்கிறார்.


பெண் சாமியார் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் ஹிந்து இயக்கங்கள் பெண்சாமியார் பிரக்யாசிங்கை கைவிட்டு விட்டன என்று எழுதியதோடு கூறுவதோடு அந்த பயங்கரவாதிகள் செய்யும் செயலை நினைத்து பெருமைப்படுவதாகவும் பதிவு செய்திருக்கிறார். அப்பாவிகள் கொலை செய்யப்படுவதும், வெடிகுண்டுகள் செய்ய பயிற்சி அளிப்பதற்கு பெருமைப் படுவதோடு அதை பகிரங்கமாக அறிவித்து இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மீதும் அமைதி விரும்பும் அனைத்து இந்திய மக்களின் மீதும் போர்ப் பிரகடனம் செய்திருக்கிறார் பால்தாக்கரே.


தீவிரவாதத் தடுப்புப் படை மற்றும் மகாராஷ்ட்ர மாநில அரசுடன் மட்டுமல்ல மத்திய அரசும் தலையிட்டு இவ்விஷயத்தில் தேசத்திற்கு விரோதமாக, பிரச்சாரம் செய்யும் பால்தாக்கரேயை, பயங்கரவாதத்திற்கு பால் வார்க்கும் பால் தாக்கரேயை உடனடியாகக் கைது செய்து பயங்கரவாதத்திற்கு உடந்தையான சக்திகளை ஒடுக்க வேண்டும்.

Wednesday, October 15, 2008

ஆந்திரா மூன்று குழந்தைகள் உள்பட 6 பேர் எரித்துக் கொலை


ஆந்திர மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டம் மத பயங்கரவாதத்தின் கொடு மைக்கு இலக்கானது. ஒரே குடும்பத் தைச் சேர்ந்த 6 பேர் (இரண்டு வயது குழந்தை உள்பட) உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்டனர்.


பைன்சா நகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் வடோலி என்ற கிராமத்தில் இந்தக் கொடுமை நிகழ்ந்தது.



மஹ்மூத் கான் தையல் தொழி லாளி யான இவர் மனைவி சஃபியா பேகம், தனது மகள், ரிஸ்வானா மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகளான நுஃமான், அர்சலான், துபாஃபலக் என்ற இரண்டரை வயது குழந்தை உள்பட ஆறுபேரும் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.


அதிகாலை மூன்று மணியளவில் அந்தப் பகுதியில் நுழைந்த வெறிக் கும்பல் டெய்லர் மஹ்மூத் கானின் வீட்டை வெளிப்புறமாக பூட்டி தீயிட்டு கொளுத்தியுள்ளது.


மத சிலை ஊர்வலத்தை வைத்து பெரும் கலவரத்தை உருவாக்கிய சக்தி கள் பெரும் வன்முறையை திட்டமிட்டு அரங்கேற்றின. வடோலி கிராமத்தில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினர் உயிருக்கு அஞ்சி பைன்சா பகுதிக்கு சென்றனர். வெள்ளிக் கிழமை 30 குடும்பதினர் தப்பிச் சென்ற போதிலும் டெய்லர் மஹ்மூத் கான் குடும்பத்தினர் மட்டும் பைன்சா செல்லவில்லை. வன்முறையாளர்களின் வெறியாட்டத்திற்கு இலக்காகி விட்டனர். துர்கா சிலை ஊர்வலம் தொடர்பாக வெடித்த கலவரத்தில் முதலில் நான்கு பேர் கொல்லப் பட்டனர். காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பைன்சா பகுதியில் பிறப்பிக்கப் பட்டிருந்தாலும் கூட நிர்மல் மற்றும் அடிலாபாத் நகரங்களுக்கும் கலவரம் பரவியது.


மாநில உள்துறை அமைச்சர் கே.ஜனா ரெட்டி மற்றும் மாநில காவல்துறைத் தலைவர் எஸ்.எஸ்.பி யாதவ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் மஜ்லீஸெ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவருமான அசதுத்தீன் ஒவைசி சம்பவ இடத்திற்கு வந்து அங்கு வந்தி ருந்த மாநில அமைச்சர் ஜனாரெட்டியிடம் நேரிடையான தனது கண்டனத்தை தெரிவித்தார். சிறுபான்மை சமூகத்தின ருக்கு பாதுகாப்பு வழங்கும் விஷயத்தில் மாநில அரசு படு தோல்வி அடைந்து விட்டது என்றும் குற்றம் சாட்டினார்.


நடைபெற்ற படுகொலைகளுக்கு தேசத் துரோக ஆர்.எஸ்.எஸ் இயக்கமே முக்கிய காரணம் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.


தசரா ஊர்வலத்தில் வன்முறை வெறி யாட்டம் நடத்தி கடந்த 48 மணிநேரத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக இருந்த சமூக விரோதக் கூட்டத்தை வன்மையாகக் கண்டிப்பதாக கொல்கத்தாவில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு குறிப்பிட்டுள்ளது.


நடைபெற்ற கலவரத்திற்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் தீவைத்து கொல்லப் பட்டதற்கும் சிபிஜ விசாரணை மேற்கொள்ளப் படவேண்டும் என்றும் சிபிஐ விசாரணை குறித்து அறிவிக்காமல் உள்துறை அமைச்சர் தனது வீட்டிற்கு செல்ல முடியாது என அசதுத்தீன் எச்சரிக்கை விடுத்தார்.


வடோலி மற்றும் பைன்சா பகுதிக்கு உடனடியாக வந்த தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மாநில காவல்துறை முழுமையாக செயலிழந்து விட்டது என குற்றம் சாட்டினார்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உறவு களை பறிகொடுத்தவர்களுக்கும் தலா பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திர சேகர ராவ் தெரிவித்திருக்கிறார்.


இந்நிகழ்வுக்கு ஆந்திர அரசே பொறுப்பேற்க வேண்டும் (அப்படி போடு!) என பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்திருக்கிறார்.


அப்பாவி மக்களின் ரத்தங்களை குடிப்பவர்கள் நடத்தும் ஊர்வலங்களுக்கு அனுமதி கொடுத்ததே இந்த கொடும் செயலுக்கு காரணமாக அமைந்து விட்டது.

விழுப்புரம்: பள்ளிவாசல் மீது தாக்குதல் காவல்துறை மெத்தனப் போக்கிற்கு முஸ்லிம்கள் கண்டனம்


அமைதி விரும்பாத இந்துத்துவவை பாசிச வெறிக்கும்பல் தங்கள் கைவரி சையை விழுப்புரம் தக்வா பள்ளிவாசலின் மினாராவை உடைத்தும், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் வன்முறை வெறியாட்டம் துவக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 11.10.2008 அன்று விழுப்புரம் சிற்றேரிக் கரையில் மஸ்ஜிதே தக்வா பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளி நீண்ட நெடுங்காலமாக தமிழக வக்ப் வாரியத்தின் காலி இடமாக இருந்ததையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் நாற்புற மும் கோட்டைச் சுவரை எழுப்பி நடுவில் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. இரு புறமும் உயர்ந்த கேட்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஐவேளை தொழுகையும் நடைபெற்று வருகிறது. அதைச் சுற்றி லும் 150 முஸ்லிம் ஏழைக் குடும்பங்கள் குடியிருப்புகள் உள்ளன. அதற்கு சற்று தூரத்தில் கிறித்தவ மக்களின் கல்ல றைத் தோட்டமும் உள்ளது. கிறித்தவக் கல்லறைகள் பலவற்றை பாசிசக் கும்பல் உடைத்து இழிவுபடுத்தியது. அதற்கு சில தினங்கள் கழித்து இப்பள்ளியின் நுழைவாயில் கேட் மினாரா உடைக்கப் பட்டுள்ளது. பள்ளியின் சன்னல் கண்ணா டிகளும் உடைத்து நொறுக்கப்பட்டுள் ளன. காலையில் சுப்ஹு தொழுகைக் குச் சென்ற இமாம் மற்றும் ஜமாத்தார் கள் அதிர்ச்சியுற்றனர். பள்ளிவாசல் காம்பவுண்ட்டைச் சுற்றிலும் ஏராளமான லோக்கல் சாராய பாக்கெட்டுகள் சிதறிக் கிடந்துள்ளன.

இத்தகவலை அறிந்த தமுமுக மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.எம். ஜுனைது விழுப் புரம் விரைந்து தமுமுக மாவட்ட அனைத்து நிர்வாகிகளிடமும் ஜமாத்தார்களிடமும் விசாரித்து இரவு ஏழு மணிக்கு சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைத் துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அனைத்துக் கட்சி பிரமுகர்களின் கருத்தையும் கேட்டறிந்தார். ஒட்டு மொத்த கட்சி நிர்வாகிகளும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மதத்தின் பெயரால் இழிசெயலில் ஈடுபடும் பாசிச இந்துத்துவ சக்திகள் உடனடியாக காவல்துறையால் கண்டறியப்பட்டு தமிழக அரசின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக் களுக்கு இடமில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படாவிட் டால் அனைத்துக் கட்சிகள் சார்பில் விழுப்புரம் காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணியும் பொதுக் கூட்டமும் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Sunday, October 12, 2008

மகனே... சரணடைந்து குற்றமற்றவன் என நிரூபித்துவிடு... வீரத் தாயின் ஆவேசம்


டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்படும் தவுகீர் என்னும் அப்துல் சுபுஹானின் தாயார் தனது மகனுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத் திருக்கிறார்.

அப்துல் சுபுஹான் டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்படும் ஒரு நபராக இருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து நாடெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஹ்மதாபாத் மற்றும் டெல்லி குண்டுவெடிப்புகளுக்கு தவுகீர் முக்கிய மூளையாக செயல்பட்டதாகவும் புலனாய் வுத் துறையினர் கூறி வருகின்றனர். ஒரு மனிதன் பிடிபட்டாலே மனம் போன போக்கில் கட்டுக் கதைகளை கட்ட விழ்த்து விடும் சில ஊடக பயங்கர வாதிகளுக்கு குண்டுவெடிப்பு தொடர் பாக ஒருவர் தலைமறைவாக இருக்கிறார் என செய்தி கிடைத்தால் எப்படி இருக் கும்? கும்மாளம் போடாத குறையாக சந்தோஷத்தில் மூழ்கி சதிக் கதைகளை சந்திக்கு ஒன்றாக அவிழ்த்து விடுவார் கள். அதே கதை இங்கும் அரங்கே றியது. லஷ்கரே தொய்பா என்ற தீவிர வாத இயக்கத்தைச் சேர்ந்தவர் அப்துல் சுபுஹான் என்றும், இந்தியாவின் பின் லேடன் என்றும் நம்மூரு தினத்தந்தி கூட செய்தி வெளியிடுகிறது.

நிலைமை இவ்வாறிருக்க, அப்துல் சுபுஹான் என்ற தவுகீர் உயிரோடு இருக்கிறாரோ இல்லையோ என்ற பதைபதைப்பு அவரது குடும்பத்தின ருக்கு ஏற்பட்டது. அப்துல் சுபுஹானின் தாயார் சுபைதா குறைஷி தனது மவுனத்தைக் கலைத்தார். செய்தியாளர் களின் முன் அவரது வழக்கறிஞர் சொலேகருடன் தோன்றினார். உயிர் களை பலிகொண்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற நிகழ்வு களில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் சிக்கியிருந்தாலும் அவர்களுக்கும் அதே கதிதான் ஏற்பட்டிருக்கும்.

குண்டுவெடிப்பில் என் மகனுக்கு தொடர்பு இருந்தால் எண் கண் முன்பாக அவன் தண்டிக்கப்படட்டும். எங்கள் குடும்பத்தின் முன்பாகவே அவனை தூக்கில் போடுங்கள். அவனை தூக்கில் போடுவதைத் தடுத்து நிறுத்த மாட்டோம் என ஆக்ரோஷத்துடன் அறிவித்த அந்த வீரத்தாய், தனது மகன் உடனடியாக சரணடைந்து நிரபராதி என தன்னை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வீரத்தாய் சுபேதா குறைஷியின் அறிவிப்பு பல்வேறு பத்திரிகையிலும் பரபரப்பு செய்தியாக வெளியிடப்பட்டது.

தவுகீர் அப்பாவி

தாயார் கூறுகிறார் என `டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது. தவுகீரின் தாய் அவரை சரணடையுமாறு வேண்டுகிறார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை முதல் பக்கத்தில் சிறிய செய்தியாக ஆரம்பித்து ஏழாம் பக்கத்தில் செய்தியை தொடர்கிறது.

தினமணி தவுகீரின் தாயார் கூறியதை சிலாகித்து நெகிழ்ந்து தலையங் கமாகவே தீட்டியுள்ளது. இப்படி இந்தி யாவை நேசிக்கும் சகோதரர்கள் இஸ் லாமிய சகோதரர்கள்தான் பெரும்பான்மையினர் என்பதை ஏனைய
மதங்களைச் சேர்ந்த இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தினமணி தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள் ளது. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங் களும் வீரத்தாய் சுபேதா குறைஷியின் கருத்தை நல்ல நோக்கத்துடன் வெளி யிட்டுள்ளன. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களின், உழைக்கும் மக்களின், உழைப்பிலும் உதிரத்திலும் உருவாக்கப் பட்ட தினத்தந்தி இதுபோன்ற சம்பவத் தில் செய்தி வெளியிட்ட விதம் அந்தப் பத்திரிகையை போற்றி வளர்த்த நியாய உணர்வு கொண்ட அனைவரின் முகத்திலும் கரி பூசுவதைப் போன்று அது வெளியிட்ட செய்தி அமைந்தது. குண்டுவெடிப்பு சதிகாரன், இந்தியாவின் பின்லேடன் தவுகீரின் தாய் ஆவேசம் என சற்றும் தனது தகுதிக்கு பொருந்தாத தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது.

எல்லா நடுத்தர குடும்பத்தினரைப் போன்றே கனவுகளோடு வளர்த்தேன். குண்டுவெடிப்புகளுக்கு என் மகன் அப்துல் சுபுஹான் குறைஷியே காரணம் என கூறப்படுகிறது. ஆனால் என் பிள்ளைக்கு நான் நல்ல குணங்களை யும், நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுத்துள்ளேன். எனவே என் மகன் அப்துல் சுபுஹான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவான் என எங்க ளால் நம்ப முடியவில்லை என்றும் அந்த வீரத்தாய் சுபைதா குறைஷி தெரிவித் தார். அப்துல் சுபுஹான் என்ற தவுகீரின் விவகாரத்தில் உண்மைகள் வெளி வருமா?

Wednesday, October 8, 2008

போலிஎன்கவுண்டர்: ''எங்கிருந்தோ கொண்டுவந்த பிணங்கள்!





டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாடு முழுவதும் எழுந்த விமர்சனக் கணைகளால் ஆடிப் போன மத்திய அரசும், டெல்லி பிரதேச அரசும் எத்தைத் தின்றால் பித்தம் தனியும் என்ற நிலையில் தடுமாறியது. இதுவரை நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என அப்பாவிகள் மீது குற்றம்சாட்டி வளைத்துப் பிடித்து வரும் நிலையில் குண்டுவெடிப்பு குற்றங்களில் சங்பரிவார் இயக்கங்கள் பின்னணியில் இருந்ததாக பல்வேறு மட்டங்களில் நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்த கோணத்தில் இதுவரை மத்திய அரசோ, மாநில அரசுகளோ துப்பறிந்த தில்லை. உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய உண்மை எண்ணம் இல்லையோ என்பதை நிரூபிக்கும் விதமாக அரசுகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதி நிகழ்ந்த டெல்லி தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதி களுடன் துப்பாக்கி சண்டை நடந்ததாக வும் அதில் இருவர் கொல்லப்பட்ட தாகவும், கொல்லப்பட்டவரில் ஒருவர் ஆதிஃப் என்ற பஷீர்தான் முக்கிய சதிகாரன் என்றும் டெல்லி காவல்துறை ஆணையர் ஒய்.எஸ்.தாத்வால் தெரிவித் தார். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு காவல்துறை அதிகாரியும் பலி யானதுதான் பெரும் சோகம்.


டெல்லியின் ஜாமியா நகர் பகுதி முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பகுதி யாகும். குறுகிய சந்துகளில் திடீரென நாடகம் போல் நடைபெற்ற என்கவுண்டர் சம்பவம் அப் பகுதி மக்களை அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

குறுக்குச் சந்துகளில் குமுறலுடன் கூடிய முஸ்லிம் இளைஞர்கள் என்ன நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் முஸ்லிம் கள் குழுமினர்.
ஒலிபெருக்கிகளின் மூலம் பள்ளி வாசல்களில் அறிவிப்பு செய்யப்பட்டது. மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது. பாரம்பரியம் மிக்க பல்கலைக் கழகமான ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டது தேவையற்ற பதட் டத்தை ஏற்படுத்தியது. ஜாமியா நகரில் ஒரு போலி என்கவுண்டர் நிகழ்த்தி ஓர் அபார்ட்மெண்டில் நான்காவது தளத்தில் இரண்டு உடல்களை வேண்டுமென்றே வைத்து நாடகமாடுவதாக ஜாமியா நகர மக்கள் கோஷம் எழுப்பினர்.
சில உள்நோக்கம் கொண்ட தொலைக்காட்சிகள் பள்ளிவாசலில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தவறான தகவல்களைக் கொடுத்தன.
ஜாமியா நகர் பாட்லா ஹவுஸ் அபார்ட்மென்டில் 4வது மாடியில் என்கவுண்டர் நடத்தப்பட்டதாக காவல் துறை அறிவித்தது.
நடைபெற்ற இந்த என்கவுண்டர் குறித்து நீதி விசாரணை நடத்த வேண் டும் என டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.ஜீலானி கோரிக்கை விடுத்திருக்கிறார். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆன வர். ஜாமியா நகர் பகுதி மக்கள் வெகு காலமாகவே காவல்துறையினரின் கெடுபிடிகளில் சிக்கி வேதனையடைந்து வருகின்றனர். எந்த ஒரு நிகழ்வுக்கும் பிறகு இப்பகுதியை சல்லடையாக சலிப்பதே நடைமுறையாகி விட்டது என்றும் தனது குமுறலை ஜீலானி தெரிவித்தார்.
இருவர் முன்கவுண்டர் செய்யப்பட்ட விதமும், என்கவுண்டர் செய்த இடமாக காவல்துறையினர் குறிப்பிடும் இடமும் முழுமையாக சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவரின் முகத்தை பொதுமக்களிடம் காட்டவில்லை. மர்ம மான முறையில் போர்வையால் மூடப் பட்டதைக் கண்டு சந்தேகம் எழுப்புகிறார் ஃபைஸல்கான் என்ற அப்பகுதிவாசி. எங்கள் பகுதியைச் சேர்ந்தவரை சுட்டுக் கொன்றதாக கூறுகிறார்கள். அவர் மாணவரா? அல்லது குடும்பஸ்தரா? என்பதை எங்களிடம் காட்டாமல் அவர்கள் எவ்வாறு அறிவிக்கிறார்கள்? அவர்களாகவே மர்மமான முறையில் அறிவித்திருப்பது நிச்சயம் சந்தேகத்துக் குரிய ஒன்றாகவே உள்ளது என குறிப்பிடுகிறார்கள் அவ்வூர் வாசிகள்.
நீங்கள் இந்தப் பகுதி யைப் பாருங்கள், யாரும் தப்பித்து ஓடும் நிலையிலா இருக்கிறது? மிகவும் மக் கள் நெருக்கமான பகுதி யில், அதிலும் ஆயிரக் கணக்கான காவல்துறையினர்முகாமிட்டுக் கொண்டிருக்கும் இங்குள்ள யாருமே எவ ரும் தப்பித்து ஓடியதைப் பார்த்ததில்லை என டெல்லி ஜாமியா நகர் பகுதிவாசி ஆர்.ஆபித் குறிப்பிடுகிறார்.
ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத் தின் விரிவுரையாளர் ஃபரியாத் தீவிர வாதிகள் பதுங்கி இருந்ததாக சொல்லப் படும் எல்-18 அபார்ட்மென்ட்டின் பின்னால் வசிக்கிறார். ஒரே ஒரு சிறிய புல்லட் சத்தத்தைக் கேட்டேன் என்கிறார்.

எங்களுக்கு ஒரு உண்மை தெரி கிறது. ஒவ்வொருவரும் முஸ்லிம்களைக் குறிவைப்பதையே விரும்புகிறார்கள். அதனால் இந்த முஸ்லிம் பகுதி குறி வைக்கப்படுகிறது என்கி றார் ஜாமியா நகர்வாசி சலீமுத்தீன்.

டெல்லியில் நடந்த தாகக் கூறப்படும் என் கவுண்டர் குறித்து நேரம் வாரியாகப் பார்ப்போம்.

காலை 10 மணி

20 காவல்துறை அதி காரிகளைக் கொண்ட படை துணை ஆணையர் சஞ்சீவ் யாதவ் தலைமையில் ஜாமியா நகரில் நுழைகிறது. அந்தப் படை பிளாக் எல்-18 அபார்ட் மென்ட்டை சுற்றி வளைக்கிறது.


11 மணியிலிருந்து 11.45 மணிக்குள்

காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா, புல்லட் புரூஃப் என்ற குண்டு துளைக்காத சட்டை அணியாத நிலை யில் கதவை உடைக்கிறார். காவல்துறை சோதனைக்காக வந்திருக்கிறோம் என பெருங்குரலில் கத்திக் கொண்டே உள்ளே செல்ல முயலும் போது உள்ளி ருந்து 3 எம்.எம். பிஸ்டல் சீறுகிறது. மூன்று தோட்டாக்கள் சர்மாவை நோக் கிப் பாய்ந்தன. இரண்டு தோட்டாக்கள் அவரது உடலைத் துளைத்தது. சர்மா தரையில் சாய, அவரை காவல்துறை யினர் தாங்குகின்றனர். மற்றொரு தோட்டா ஏட்டு பல்வான் சிங்கின் வலது கையில் துளைத்தது. காவல்துறை ஆய் வாளர் சர்மா `ஹோலி பேமிலி` மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு வயிற்றிலிருந்த குண்டு அகற்றப் பட்டது.

மூத்த காவல்துறை அதிகாரிகள் இணை ஆணையர் (சிறப்புப் பிரிவு) கர்னால் சிங் மற்றும் துணை ஆணையர் (சிறப்பு) அலோக் குமார் உள்ளிட்டவர்கள் ஜாமியா நகர் வந்தனர்.

சிறப்புப் படையின் பல்வேறு பிரிவின ரும் தேசிய பாதுகாப்பு கமாண் டோக்களும் அங்கு வந்தனர். மீண்டும் ஒருதடவை காவல்துறை அதிகாரிகள், அபார்ட்மென்டுக்குள் நுழைய முயல்கின்றனர். இப்போது இவர்கள் அனைவரும் படு முன்னெச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.

22 சுற்றுகள் துப்பாக்கிகள் தோட்டாக் களை உமிழ்கின்றன. இரண்டு பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இரண்டு பேர் குதித்து தப்பியதாகவும், ஒருவர் காவல்துறையினரிடம் பிடிபட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இறந்தவர்களின் உடல்களை காவல் துறையினர் அப்புறப்படுத்து கின்றனர்.
சரியாக 11.45 மணி துப்பாக்கிச் சண்டை ஓய்ந்து விட்டதாக காவல் துறை அறிவித்து விட்டது. காவல் துறை அறிவித் ததுதான் தாமதம், அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம் கள் வீதிகளுக்கு வெளியே வந்து உள்ளூர் தொலைக் காட்சி சேனல்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பள்ளிவாசல்களில் தீவிர வாதிகள் பதுங்கியிருந்ததாக பொய்ச் செய்தியை ஒளிபரப்பியதால் முஸ்லிம் கள் ஆத்திரம் அடைந்தனர்.

மாலை 4 மணிக்கு

டெல்லி காவல்துறை ஆணையர் ஒய்.எஸ்.தாத்வால் செய்தியாளர் கூட்டத் தில் என்கவுண்டர் குறித்து அறிவித்தார்.

மாலை 7 மணி

காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா படுகாயம் அடைந்த அவர் மரணமடைந்தார்.

காவல்துறையினரின் என்கவுண்டர் அறிவிப்புகள் தங்களால் ஜீரணிக்க முடியவில்லை என முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷாவராத் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான், ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் விவகாரக்குழு செயலாளர் முஜ்தபா ஃபரூக் அகில இந்திய மில்லி கவுன்சிலின் செயலாளர் அப்துல் வஹாப் கில்ஜி மற்றும் டாக்டர் தஸ்லிம் ரஹ்மானி போன்றோர் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்திய அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டது.

என்கவுண்டர் நடந்ததாகக் கூறப் பட்ட இடங்களில் முஸ்லிம் தலைவர் களின் குழுவோடு நானும் சென்றேன். ஆனால் எங்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை என குமுறலுடன் கூறினார் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம். டாக்டர் ஜஃபருல் நாட்டின் முன்னணி சமூகநல ஆர்வலர். மில்லி கெஜட் ஆங்கில செய்தி ஏட்டின் ஆசிரியர் அவர் உள்பட முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிடச் சென்றபோது காவல்துறையினர் அனு மதி மறுத்ததால் என்கவுண்டர் விவகா ரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக் கிறது. முக்கிய முஸ்லிம் அமைப்புகளான முஷாவராத், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஜம்யிய்யத்தே உலமாயே ஹிந்த் போன்ற முக்கிய அமைப்புகள் போலி என்கவுண்டரை எதிர்த்து மறியல் போரை செப்டம்பர் 26ஆம் தேதி நடத்த இருப்பதாகவும் அறிவித்திருப்பது மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

இதனிடையே முறையற்ற கைதுகள் தொடர்ந்து வருவதாக தலைநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலஹா பாத்தைச் சேர்ந்த முஹம்மது ரஷீத் புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றவர். அவர் ஜாமியா மில்லியா இஸ்லா மியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. என்ற ஆராய்ச்சி உயர்படிப்பு கற்று வந்தார். அவரை அபுல் ஃபஸல் என்கிளேவ் பகுதியில் வீடு எண் சி.81லிருந்து கைது செய்துள்ளனர். முஹம்மது ரஷீத் வீட் டிற்கு அருகில் டீக்கடை நடத்திவரும் 75 வயது பெரியவர் இதனை தெரிவித் திருக்கிறார்.


இந்தியத் தலைநகர் ஆயிரத்து நூறு ஆண்டுகள் முஸ்லிம்களால் ஆளப்பட்ட போதும் அனைத்து மக்களுக்கும் கூர்மையான நீதி வழங்கி மகிழ்ந்தனர்.


ஆனால் உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியின் காவல்துறையின் சித்திரவதைகளால் மனம் நொந்து நிஜாமுத்தீன் (30) மற்றும் முயீனுத்தீன் (25) ஆகியோர் தற் கொலைக்கு முயன்றிருக்கின்றனர். அதற்குக் காரணமான இரண்டு அதி காரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.


இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் நிலை விளிம்பு நிலைக்கு தள்ளப் படுகிறதா?

Source :TMMK

Saturday, September 20, 2008

முத்துப்பேட்டை காவல்துறையே நடத்திய கலவரம்



தமிழக அமைதியைக் குலைத்து வரும் இந்து முன்னணி உள்பட சங்பரிவார் கும்பலுக்கு திருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒரு முக்கிய குறியாகும். விநாயகர் ஊர்வலம் என்ற போர்வையில் இந்து முன்னணி பாஜக வெறிக்கும்பல் நடத்திவரும் கலவர பேரணியில் முஸ்லிம்கள் பெரும்பான் மையாக வாழும் முத்துப் பேட்டை பலமுறை பாதிக்கப் பட்டுள்ளது. பதற்றத்திற்குள் ளாகியுள்ளது.



இந்து முன்னணி கும்பல் நடத்தும் வெறி ஊர்வலத் தின் நோக்கமே முஸ்லிம் பகுதி களை ரணகளமாக்குவது தான். இதை பல்வேறு இடங் களில் பல்லாண்டு காலமாகச் செய்து வருகிறார்கள். முஸ்லிம்கள் மட்டுமே வாழும் பகுதிகள் மற்றும் முஸ்லிம்கள் மிகப் பெரும்பான் மையாக வாழும் பகுதிகளில், ஆபாச மாகவும், வெறித்தன மாகவும் கோஷ மிட்டு சண்டைக்கு இழுப்பது, பள்ளி வாசல்களுக்கு அருகே தொழுகை நேரத்தில் மிகமிக மெதுவாகக் கடப்பது, பயங்கர சப்தத்தோடு தாரை தப்பட்டை களை அடிப்பது, பட்டாசுகளை வெடிப் பது ஆகியவை இந்த வெறிக் கும்பலில் இழிசெயல்களில் சில ஆகும்.
`துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியக் கட்டு’, `பத்து பைசா முறுக்கு, பள்ளிவாசலை நொறுக்கு’ `பாபரின் பிள்ளை களே பாகிஸ்தானுக்கு ஓடுங் களே` என்பன போன்ற வெறிக்கூச்சல்களை எழுப்பி முஸ்லிம்களை சீண்டுவது இவர்களின் வழக்கம். காவிக் கும்பலின் கலவரப் பேரணியில் இடம் பெறும் கயவர்கள் பள்ளிவாசலில் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது தொழுவோர் மீது செருப்புகளை வீசிச் செல்வதும் உண்டு.

மேற்கண்ட சம்பவங்களைக் காலங் காலமாய் பொறுத்துப் பொறுத்து பொறு மையின் விளிம்புக்கே போன முத்துப் பேட்டை முஸ்லிம்கள், விநாயகர் ஊர் வலம் என்ற பெயரில் சங்பரிவார் கும்பல் நடத்தும் வெறிப் பேரணியை மாற்றுப் பாதையில் நடத்துமாறு கடந்த சில ஆண்டுகளாகவே முறையிட்டு வருகின்றனர்.
முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் இதற்காக பல தீர்மானங்களை நிறை வேற்றிவிட்டது. கடந்த ஆண்டு மாற்றுப் பாதை குறித்து அரசால் தமுமுகவுக்கு வாக்கு தரப்பட்டு பிறகு மாவட்ட காவல் துறையால் அது மீறப்பட்டது. இந்த ஆண்டு வெறி ஊர்வலத்தை மிகுந்த வீரியத்துடன் நடத்தி முஸ்லிம்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சங்கும்பல் மும்முர மாக களத்தில் இறங்கியுள்ளது. இதை யறிந்த முஸ்லிம்கள் தரப்பு காவல் துறையிடம் முறையிட்டு மன்றாடி யுள்ளது. பிரச்சினை மிகுந்த பகுதிகல் ஊர்வலப் பாதையை மாற்றியமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்றம் வெயிட்டுள்ள ஆணை (எண் 22286/2008WP) கூறுகிறது.

ஆயினும் காவல் துறை செவிசாய்த்த பாடில்லை. முத்துப்பேட்டையின் அமைதி யைக் குலைப்பதில் முதலிடத்தில் இருப் பவர் பாஜக மாவட்டத் தலைவராக இருக்கும் கறுப்பு (எ) முருகானந்தம். திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங், கறுப்புக்கு ஒரு உறுப்பு போலவே செயல் படுகிறார் என்று குற்றம்சாட்டுகின்ற னர் முத்துப்பேட்டை முஸ்லிம்கள்.

முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கும் பழைய பேருந்து நிலைய பகுதி, புதுத் தெரு, கிட்டங்கித் தெரு, பட்டுக்கோட்டை ரோடு, மதரஸா தெரு, தெற்குத் தெரு, பேட்டை ரோடு, அரபுசாஹிப் தெரு ஆகிய தெருக் களின் வழியாகத்தான் ஊர்வலம் நடத்துவோம் என சங்கும்பல் இறுமாப் போடு பேச, மாற்றுப் பாதை இருக்கும் போது முஸ்லிம் பகுதிக்குள் நுழைந்து கலவரம் விளைவிப்பதை நாங்கள் ஏற்க முடியாது என முஸ்லிம்கள் உறுதியாக கூறியுள்ளனர். காவல்துறை முஸ்லிம்களின் கோரிக்கையை காற்றில் பறக்கவிட்டது.
பாஜக மாவட்டத் தலைவர் கறுப்பு (எ) முருகானந்தம், ராஜேந்திரன் உள்ளிட் டோர் தலைமையில் பாஜக மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா வெறி யுரையோடு செப்.11, 2008 மதியம் 3 மணிக்கு இந்து முன்னணியின் கலவர ஊர்வலம் தொடங்கியது.
ஏற்கனவே, 2007ல் இவர்கள் பள்ளி வாசலில் செருப்பு வீச்சு நடத்தி யுள்ளதால், இம்முறை தற்காப்புக்காக முத்துப்பேட்டை முஸ்லிம்கள் புதுப்பள்ளி வாசலில் கூடியுள்ளனர். பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கூடுவதை அறிந்த காவல் துறை பள்ளிவாசலை சுற்றி வளைத்து நிறுத்தப்பட்டது.
சூழ்நிலைகள் பதற்றமாகிக் கொண்டே போக பள்ளிவாசலை ஊர்வலக் கும்பல் தாக்கலாம் என அஞ்சிய ஜமாஅத்தினர் முஸ்லிம்களை பள்ளிவாசலுக்குள் வருமாறு அறிவிப்பு விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து எஸ்.பி. அமித்குமார் சிங், திருத்துறைப் பூண்டி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பள்ளிவாச லுக்குள் நுழைந்து அங்கிருந்தோரிடம் எச்சரிக்கை விடுக்கும் தொணியில் பேசத் தொடங்கினர். பள்ளிவாசலுக்கு அருகே வந்து வெறிக் கும்பல் கலவரம் தூண்டுவதை ஏற்க முடியாது என்பதில் முஸ்லிம்கள் உறுதிகாட்ட, சாலை மறியல் செய்வீர்களா? செய்து கொள் ளுங்கள்என்று முஸ்லிம்களுக் குப் பாதை காட்டிவிட்டு, `அட்டாக்’ என்று காவல்படைக்கும் ஆணையிட்டுள்ளார் எஸ்.பி. முன்னதாக பள்ளிவாசலில் கூடியிருந்த கூட்டத்திருந்து யாரோ ஒரு விஷமி வெளிப்புறம் நோக்கி, கல் வீசியுள்ளார். அது காவி மனத்தோடு வந்திருந்த காவல் படைக்கு முஸ்லிம்களைத் தாக்கப் பெரும் ஆயுதமாகப் பயன்பட்டுள்ளது.
காவிவெறிக் கும்பலிடம் இருந்த வெறி காவல்துறையிடம் இடம்மாறியதோ என்னவோ? திடீரென பள்ளிவாசலை சூறையாட ஆரம்பித்துள்ளனர். பள்ளி வாசலின் கண்ணாடிகளை லத்திகளால் அடித்து உடைத்துள்ளனர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததில் காவல் துறையினரின் லத்திகளே உடைந்து போயுள்ளன. உடைந்த லத்திகளை அங்குள்ளோர் எடுத்துவைத்துள்ளனர். அந்த அளவுக்கு வெறி அவர்களின் தலைக்கேறியிருக்கிறது.
எஸ்.பி. நிறுத்துமாறு சொல்லியும் கூட லத்திகளின் சுழற்சி நிற்கவில்லை. நோன்பாளிகளான முஸ்லிம்கள் கொடு மையாக வதை செய்யப்பட்டுள்ளனர். தொழுகையில் இருந்த நிலையில், தமுமுக முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ஹுமாயூன் கபீர் தாக்கப்பட்டு, பல் உடைக்கப்பட்டு இரத்தக் காயப் படுத்தப்பட்டுள்ளார்.
இந்து முன்னணி கும்பல் எதைச் செய்ய விரும்பியதோ, அதை முத்துப் பேட்டையில் காவல்துறை மிகச் சிறப் பாக(?) செய்து அவர்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.
செய்தியறிந்த தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ, பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி இருவரும் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு போலிஸார் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டதைக் கடுமையாக் கண்டித்தனர். கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர். இல்லையேல் திருவாரூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் தமுமுக எனது தலைமையில் போராட்டம் நடத்தும் என்று பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி எச்சரிக்கை விடுத்தார். பின்னர் கைது செய்யப்பட்ட 35 பேரில் 19 பேரை உடனே விடுவித்தனர்.
பூட்சு கால்களோடு பள்ளிவாசலுக் குள் தொழுமிடத்திற்கு நுழைந்த காவல்துறை கண்ணில் பட்டவர்களை யெல்லாம் கைது செய்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந் துள்ளது. முத்துப்பேட்டையில் அத்து மீறிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கலவர ஊர்வலத் திற்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர் பார்ப்பு.

Sunday, September 14, 2008

ஒரிசா படுகொலைகளை நியாயப்படுத்தும் ராமகோபாலன்


ஒரிசாவில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை ரணமாக்கி, கன்னி யாஸ்திரிகளை மானபங்கம் செய்து, எரித்துக்கொன்று வெறியாட்டம் நடத்தி வரும் சங்பரிவார அராஜகங்களை வலி மையாக ஆதரித்து அறிக்கை வெளி யிட்டுள்ளார் தமிழகத்தின் பயங்கரவாதி ராமகோபால அய்யர்.
“ஒரிசா மாநிலத்தை கிறிஸ்தவ மயமாக்குவதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து கொட்டி மதம் மாற்ற முயற்சித்தனர். அதைத் தடுத்து நிறுத்திய வர் சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி. அவருக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்கப் படவில்லை.
தங்களது உயிருக்குயிரான சுவாமி கள் படுகொலை செய்யப்பட்டவுடன் மலைவாழ் மக்களால் ஆத்திரத்தையும், கோபத்தையும், எரிச்சலையும் கட்டுப் படுத்த முடியவில்லை. சுவாமிகளை சதிசெய்து கொல்ல காரணமானவர்கள் அந்த பயங்கரவாதிகளுக்கு மறைவிட மும் பாதுகாப்பும் உதவியும் செய்த சர்ச்சுகளைத் தாக்கினார்கள்.’’- என்று தன் ரத்தத்தில் கலந்தோடும் விஷத்தை வார்த்தைகளால் வாந்தி யெடுத்துள்ளார் ராமகோபால அய்யர்.
85 வயது சுவாமிகளை சதிசெய்து கொல்லக் காரணமானவர்களைத்தான் மலைவாழ்(?) மக்கள் தாக்கினார்களாம்.
சதிகாரர்களுக்கு மறைவிடமாக சர்ச்சுகள் இருப்பதால்தான் கொளுத்து கிறார்களாம். பயங்கரவாதத்திற்கு பலியான மக்களையே பயங்கரவாதி களாக சித்தரித்து அறிக்கை விடுகிறார் மறைகழண்ட பயங்கரவாதி ராமகோபாலன்.
கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் ஒருநாள் விடுமுறை அறிவித்ததை `பிளாக் மெயில்’ நடவடிக்கை என்கிறார் இந்தப் பேர்வழி. ஏற்கனவே, கன்னியாஸ் திரிகள் மானபங்கம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை `தேசபக்த நடவடிக்கை’ என்றார் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால். மாட்டுத் தோலை கையில் வைத்திருந்ததற்காக ஹரியானா வில் தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதை வி.எச்.பி. நியாயப்படுத் தியது. ஒரிசா கிறிஸ்தவர்கள் படுகொலையை ராம கோபாலன் நியாயப்படுத்துகிறார்.
மனிதநேயர்கள் என்ன செய்ய முடியும்? இவர்களைக் காறித் துப்புவதைத் தவிர...

விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள்!





மீண்டும் பற்றி எரிகிறது. ஆப்பிரிக்காவின் ருவாண்டா போல், 2002ன் குஜராத்தைப் போல் ஓர் பெரு மெடுப்பிலான ஒரு இனப்படு கொலை களுக்கான அசாதாரணமான ஆயத்தங் கள் அதில் தென்பட்டன. ஒரிஸாவின் துயர நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை வெடித்தது. ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாகக் கொளுத்திக் கொல்லப் பட்ட சம்பவம் என வரலாறு மறக்காத வேதனைச் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மனித சமூகம் நாளும் நேசிக்கும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங் கள் அழிக்கப்பட்டதும் சேவை உள்ளம் கொண்ட கன்னியாஸ்திரிகள் வன்முறை ஹிம்சை போன்றவற்றை கனவிலும் கூட நினைக்காதவர்கள் அவர்களை கொளுத் திக் கொன்ற வேதனையையும் என்ன வென்று சொல்வது?
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான சாமியார் லஷ்மானந்தா சரஸ்வதி என்பவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சாமியாரின் கொலைக்கு யார் காரணம் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தும் கிறித்தவர்கள் தான் இதற்கு காரணம் என கொடூரமாகக் கதை பரப்பி கிறித்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். ஆகஸ்டு 23க்குப் பிறகு மனித வர லாற்றில் மீண்டும் சில கொடூர நிகழ்வுகள் அரங்கேறின. ஆம்! விஸ்வ ஹிந்து பரிஷத் தனது வெறியாட்டத்தை தொடங்கியது. 23ஆம் தேதி கோத்த குடா என்ற பகுதியில் வேகமாக சென்ற வாகனங்கள் வழி மறிக் கப்பட்டன, கொளுத்தப் பட்டன. வாகன ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டார். சம்பல் பூரில் உள்ள ஆனந்த பள்ளியில் இரண்டு கன்னியாஸ்திரிகள், ஒரு சிறு சர்ச் எல்லாம் பஸ்பமாக்கப்பட்டன. அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் கன்னியாஸ்திரி கள், கிறிஸ்தவர்கள் அவர்களின் வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டன. மானாவாரியாக கொளுத்தப்பட்டன.
பிரச்சனைக்குரிய கந்தமால் மாவட் டத்தில் ஒரிஸா மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும் ஒரு பயனும் விளையவில்லை.
ஆகஸ்டு 25ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்த பந்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது. முழு அடைப்பின் போது விரும்பத்தகாத சம்பவமாக வன்முறை சம்பவங்கள் சில நடக்கும். ஆனால் வன்முறை வெறியாட் டத்தை நிகழ்த்துவதற்காகவே பந்த் நடத்தியது விஸ்வ ஹிந்து பரிஷத் என நடுநிலையாளர் நினைத்த வண்ணமே அந்த வன்முறைகள் நடந்தேறியன.
கிறித்தவர்களுக்கு எதிராக சர்ச்சை கள் நிகழ்த்தி வந்த வரும் உழைக்கும் மக்கள் சாப்பிடும் மாட்டிறைச்சிக்கு எதிராக அரசியல் நடத்தி வந்த சுவாமி லக்ஷ்மானந்தா கொலையை காரணம் காட்டி இதற்கென காத்திருந்தவர்களைப் போல வெறிகொண்ட விதமாக வேட்டை யாடினர் வி.ஹெ.பியினர்.
ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் தேதி வன்முறை வெறியாட்டத்துக்கு அஞ்சி தேவாலயங்கள் வெறிச்சோடின.
அதே நாளில் கந்த மால் மாவட்டத் தில் சிறுபான்மையினர் மீதான தாக்கு தல்கள் அதிகரித்தன. ஆர்ச் டயோசீசன் ஆஃப் புவனேஸ்வர் அலுவலகம் தாக்கப்பட்டது. ஜான் விகாஸ் என்ற சமூக நல அலுவலகம் இந்த டயோசீ சனுக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்படும் அந்த அலுவலகம் தீக்கிரையானது. சூறையாடப்பட்டது. மூன்று கார்களும், ஆறு இரு சக்கர ஊர்திகளும் கொளுத் தப்பட்டன.
முக்கியமான ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மாலை5 1/2 மணிக்கு இவையனைத்தும் கச்சிதமாக முடிக்கப்பட்டன.
6 மணிக்கு...
அதன்பிறகு திவ்ய ஜோதி பாஸ்ட்ரல் சென்டர் மீது மாலை ஆறு மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. சூறையாடல் நடத்தப்பட்டது. பலிகுடாவில் மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, கன்னி யாஸ்திரிகளின் உறைவிடமும் தாக்கப் பட்டது. கன்ஜம்படி பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயம் தாக்கப் பட்டது. கன்ஜம்டி பகுதியில் உள்ள பிராட்டஸ் தேவாலயம் தாக்கப்பட்டது. சூறையாடப்பட்டது.
6.45 மணி...
பலிகுடா பகுதியில் உள்ள மூன்று பெந்தே கோஸ்தே தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.
இரவு 7 மணிக்கு..
ரைகியா பகுதியில் தலித் சமூகத் தினருக்கு சொந்தமான 12 கடைகள் சாம்பலாக்கப்பட்டன. விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட அப்பாவி மக்கள் அடர்ந்த காட்டுக்கு சென்றால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற அவல நிலையில் அவர்களுக்கு இருண்ட வாழ்வை அளித்த மாநில அரசை நொந்து கொண்டு இருண்ட காட்டுக் குள் சென்றனர்.
ஆகஸ்ட் 25, 2008...
வன்முறைகள் தொடர்ந்தன. ஒரிசா மாநிலம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர் கள் உச்சகட்ட பீதியில் உறைந்தனர்.
காலை 7 மணி..
புல்பானி சர்ச்சும் அநாதை இல்லங் களும் தாக்கப்பட்டன. சிறிசண்டா எம்.சி சகோதரர் விடுதி என்ற ஆதரவற்றோர் விடுதி தாக்கப்பட்டது. அதிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் அடித்து விரட்டப்பட்டனர். குஜராத் இனப்படுகொலையின் போது சிறு பான்மை சமூகத்தினர் வேட்டையாடப் பட்ட விவகாரம் நெருஞ்சி முள்ளாய் நாட்டு மக்களின் இதயங்களை நெருடிய போதும் கூட அரசும் காவல்துறையும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரிசாவில் மனித உரிமை மீறல்கள் நடந்தன. சிறுபான்மை யினரின் உயிர்கள் உடமைகள் எவ் வளவு மலிவானது என்பதை விவரித்தது.
10.30 மணி..
பலிகுடாவில் வாழும் கிறித்தவர் களின் வீடுகள் இப்போது தாக்கப்பட்டன. சேதங்கள், உயிர் பலிகள் குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை துல்லியமாகக் கிடைக்கவில்லை.
முற்பகல் 11.30 மணி...
நுஆஷி பகுதியில் உள்ள கிறிஸ்தவர் கள் வாழும் தெரு முழுமையாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. உயிருக்கு அஞ்சி மக்கள் கானகத்திற்கு ஓடினர்.தேவாலயத்தின் சார்பாக நடத்தப் பட்ட மாணவர் விடுதி சரமாரியாக தாக்கப்பட்டது. அதில் இரண்டு மாணவர் களின் தலைப் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.
ஒரு மணி..
ஜமாஜ் பரிச்சா என்ற கிறித்தவரின் வீடு. வாகன ங்கள் தீயிடப் பட்டன. கதவு கள் நெருப்பினால் துண்டு துண்டாக உடைந்தன. கூடியக் கூட்டத்தினரால் அவர் செம்மையாக உதைக்கப்பட்டார்.
தலையில் கடும் காயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக் கிறார். (அவர் சிகிச்சை பெறும் மருத்துவ மனையின் பெயர் ரகசியமாக வைக்கப் பட்டிருக்கிறது) அவரது மனைவி ஹிந்து வாக இருந்தும் அவர் மீது கூடியிருந்த கும்பல் இரக்கம் காட்டவில்லை. அவர் மனைவியும் தாக்கப்பட்டார்.
2 மணி...
கிறிஸ்வர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதற்காக வன்முறை கும்ப லுக்கு அப்பகுதி பெண்கள் மண்ணெண்ணைய் கேன்களை போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கிறார்கள்.
இந்த வன்முறை கும்பல் செய்த குற்றச் செயலுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436ன்படி ஏழு வருடம் அதற்கு மேற்பட்ட காலம் சிறையில் தள்ள வேண்டிய அளவு குற்றம் செய்தார் கள். ஆனாலும் துணிச்சலுடன் உலா வருகிறார்கள்.
ஃபாதர் சல்லான் கன்ஜம்டி பாஸ்ட்ரல் சென்டரின் இயக்குநர், அந்த சென்டரின் நிர்வாகி சிஸ்டர் மீனா இருவரோடு சேர்ந்து அந்த அலுவலகங்கள் கொளுத் தப்பட்டன. உள்ளே மாட்டிக் கொண்ட இருவரும் உயிர் பயத்தில் அலறவும் அஞ்சி தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்களும் காட்டுக்குள் ஓடினார்கள்.
சில, இடங்களில் கிறித்தவர்களின் வீடுகளுக்குள் வன்முறை கும்பல் நுழைந்து அங்கு வீட்டுக்குள் இருந்தவர் களை வெளியே இழுத்து வந்து அருகிலுள்ள காவல்நிலையத்துக்கே கொண்டு சென்று உதைத்தனர்.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி பாதிக்கப் பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.
1. விஜய் பரிச்சா2. ஆர்.கே. நாயக்3. ஜோசப் நாயக்4. சூசன் நாயக்5. சந்தோஷ நாயக்6. ஹரி ஹர்தாஸ்7. மோசே நாயக்8. பிரகாஷ் நாயக்9. மோசே நாயக்10. ராஜு மற்றும் பலர்
ரைகியா போலிஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கருணா அநாதை நிலையம்.பத்மஹாவில் உள்ள மூன்று பெந்தோ கோஸ்தே பள்ளி மஸாதிகா சர்ச்பைசர் மஹா சர்ச், மொண்டாகியா பகுதியின் பாப்டிஸ்ட் சர்க் ஆர்.சி.சர்ச்மாத பங்கா சர்ச் வன்முறைகள் தொடர்வதால் இன்றும் ஏராளமான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கதி குறித்த தகவல் தெரியவில்லை.
பூல்பானி, சரஸ்னந்தா, பேபின்கியா, பலிகுடா மற்றும் கொஞ்சம்ண்டி பகுதி களில் கிறிஸ்தவர்களின் வீடுகள் முற்றி லும் கொளுத்தப்பட்டன. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் இதனை செய்தியாக மட்டும் வெளியிட்டன. இருந்தும் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட் டது. கலவரக்காரர்களை சுட உத்தரவிடப் பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித் தும் கூட வன்முறை ஓயவில்லை.
குழந்தைகளையும் பெண்களையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற செயல் நாடெங்கும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
குழந்தைகளைக் கூட கொலை செய்யும், பெண்களைக் கூட தீயிட்டு கொல்லும் இரக்கமற்ற மிருகத்தனத்தை பல்வேறு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. சட்டத்தை கையி லெடுத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் மனித குல விரோதி சக்திகளை வேட்டையாட விட்டு வேடிக்கை பார்த்த ஒரிசா மாநில அரசையும் மத்திய அரசையும் வன்மை யாகக் கண்டிப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி தெரிவித்தார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
ஒரிசா மனித வேட்டையை எதிர்த்து உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 16 ஆம் பெனடிக்ட் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். வன்முறைகள் இன்னும் தொடர்கின்றன.
பள்ளிகள், கல்லூரிகள் அடையாள வேலை நிறுத்தம் செய்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின் றன. ஆந்திராவில் ஒரிசா சம்பவத்தில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து முஸ்லிம் கல்வி நிறுவனங் களும் கதவடைத்தன.
முஸ்லிம் கல்வி சமூக மற்றும் கலாச் சார அமைப்பு, சிறுபான்மை மேம்பாட்டு அமைப்பு, தமீரெ மில்லத், அமாரத் மில்லத் இஸ்லாமியா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தினை அறிவித்தன.
இன்னமும் ஒரிசாவில் புதுப்புது சாம்பல் மேடுகள் முளைத்து வருவதாக வேதனை தகவல்கள் வேலைக்கொன் றாய் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரிசாவில் கிளம்பும் தீ ஜுவலை இந்தியாவின் மதசார்பின்மை(!) பெருமைப் பற்றி உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

Saturday, September 6, 2008

முகம்மது நபியை அவமதித்த தினமலர் தமிழக மெங்கும் கண்டன எதிர்ப்பு குரல்கள்








இறைத்தூதர் முகமது நபி அவர்களைப் பற்றி டென்மார்க் பத்திரிக்கையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கார்டூன்களை வெளியிட்டடது. இதை பல மேற்கத்திய நாடுகளின் பத்திரிக்கைகளிலும், இணையத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அந்த கார்டூன்கள் திரும்பத் திரும்ப மறுபிரசுரம் செய்யப்பட்டன.




இஸ்லாம் உருவ வழிபாட்டையும் அதற்குக் காரணமாக இருக்கும் அநாவசிய சித்திரங்கள் தீட்டுவதையும் தடுக்கிறது. இறைவனைத்தவிர மற்றவற்றை வணங்குவதையும், மனிதர்களை கடவுளாக்குவதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஆகவே வழிபாட்டிற்கோ அல்லது தூதர்கள் மற்றும் அன்னாரின் நேசர்களுக்கோ உருவம் கொடுப்பதையும், அது மரியாதை நிமிர்த்தமாகவே இருந்தாலும், பிற்காலத்தில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான கடவுளுக்கு உருவம் இல்லை என்ற நம்பிக்கையை சிதைத்துவிடும் என்பதால் சிலை வடிப்பதையும், சித்திரங்கள் தீட்டுவதையும் இஸ்லாம் ஏற்கவில்லை.




இதனால் தங்களுடைய மத உணர்வை புண்படச் செய்து விட்டதால் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். தங்களின் எதிர்ப்புகளை ஆரோக்கியமான முறையில் முஸ்லிம்கள் பதிவு செய்தனர். தமுமுகவும் சென்னை உட்பட தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.





இந்நிலையில் மீண்டும் தினமலர் நாளிதழின் வேலூர் பதிப்பில் இலவச இணைப்பாக வெளிவருகிறது கம்ப்யூட்டர் இதழ். இணையதளம் ஒன்றில் பிரசுரமாகியிருந்த முகமது நபிகள் குறித்த கார்ட்டூனை அந்த “தினமலர் கம்ப்யூட்டர்’’ 02/09/08 நேற்று இதழில் பிரசுரித்திருந்தார்கள்.



தினமலரின் இந்த விஷமத்தால் ஒரு விஷயம் தெளிவாகிறது. இவ்வாறு வெளியிடுவது சர்சையைக் கிளப்பக் கூடும் என்பது தெளிவாக தெரிந்திருந்தும் , விஷமத்தனமாக இதனை செய்துள்ளது தினமலர்.


காலை 10.30 மணியளவில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வேலூர் தினமலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடனே கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம், தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் ஆகியவற்றுடன் அதிரடிப்படையினரும் போலீசாரும் அங்கு குவிக்கப் பட்டனர்.

முற்றுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்லச் சொன்னார்கள். பதிலுக்கு முற்றுகையிட்ட முஸ்லிம்கள் தினமலர் ஆசிரியரைக் கைது செய்தால் மட்டுமே இவ்விடத்தில் இருந்து அகலுவதாய் கூறினர்.
முற்றுகையிட்டோர் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதில் முஸ்லிம்கள் பலர் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். போலீசார் தடியடிப் பிரயோகம் செய்ததில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப் யாதவ், டி.ஐ.ஜி. சுந்தரமூர்த்தி, மேயர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்படவில்லை. மாவட்ட ஆட்சியரும், உயர் போலீஸ் அதிகாரிகளும் தினமலர் அலுவலகத்துக்குள் சென்று, நிர்வாகிகளிடம் பேசினர். நபிகள் நாயகம் பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்டவரை கைது செய்தால்தான் கலைந்து செல்வோம் என கூட்டத்தினர் உறுதியாக இருப்பது பற்றி தெரிவித்தனர். பிறகு, நபிகள் பற்றிய கார்ட்டூனை கொடுத்தவர் இவர்தான் என்று திலிபன் என்கிற ஊழியரை தினமலர் நிர்வாகிகள் போலீஸ் முன் நிறுத்தினர். அவரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். முஸ்லிம்கள் தரப்பில் 60 பேரைக் கைது செய்த போலீஸார் அன்று இரவே விடுதலையும் செய்தனர்.

முற்றுகையிட்ட முஸ்லிம்களை கட்டுக்குள் கொண்டு வர வேலூர் மாவட்டத் தலைவர் எஸ். தஸ்தகீர், மாவட்டச் செயலாளர் அஸ்லம் பாஷா, மாவட்டப் பொருளாளர் ஏஜாஸ் அஹமது, ஊலமா அணிச் செயலாளார் சம்சுன் நாசர் உமரி, மாவட்டத் துணைச் செயலாளர் ரஹ்மான் செரிப், நஜிர், முகம்மது அலி ஆகியோர் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பெரும் பாடு பட்டனர்.


அதேப் போல திருவண்ணாமலை செங்கம், சேலம், ஆம்பூர், ஓசூர் என பரவலாக நேற்று தினமலருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களையும், பல இடங்களில் கடை அடைப்புகளையும் செய்து முஸ்லிம்கள் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

முஸ்லிம்களின் புனிதமான நோன்புக் காலமான ரமலான் மாதம் தொடங்கியுள்ள நேரத்தில் தினமலர் இவ்வாறு நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்ட சம்பவம் தமிழக முஸ்லிம் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றும் பரவலாக தமிழகமெங்கும் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

முகம்மது நபியை அவமதித்த தினமலர் தமிழக மெங்கும் கண்டன எதிர்ப்பு குரல்கள்


இறைத்தூதர் முகமது நபி அவர்களைப் பற்றி டென்மார்க் பத்திரிக்கையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கார்டூன்களை வெளியிட்டடது. இதை பல மேற்கத்திய நாடுகளின் பத்திரிக்கைகளிலும், இணையத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அந்த கார்டூன்கள் திரும்பத் திரும்ப மறுபிரசுரம் செய்யப்பட்டன.



இஸ்லாம் உருவ வழிபாட்டையும் அதற்குக் காரணமாக இருக்கும் அநாவசிய சித்திரங்கள் தீட்டுவதையும் தடுக்கிறது. இறைவனைத்தவிர மற்றவற்றை வணங்குவதையும், மனிதர்களை கடவுளாக்குவதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஆகவே வழிபாட்டிற்கோ அல்லது தூதர்கள் மற்றும் அன்னாரின் நேசர்களுக்கோ உருவம் கொடுப்பதையும், அது மரியாதை நிமிர்த்தமாகவே இருந்தாலும், பிற்காலத்தில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான கடவுளுக்கு உருவம் இல்லை என்ற நம்பிக்கையை சிதைத்துவிடும் என்பதால் சிலை வடிப்பதையும், சித்திரங்கள் தீட்டுவதையும் இஸ்லாம் ஏற்கவில்லை.



இதனால் தங்களுடைய மத உணர்வை புண்படச் செய்து விட்டதால் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். தங்களின் எதிர்ப்புகளை ஆரோக்கியமான முறையில் முஸ்லிம்கள் பதிவு செய்தனர். தமுமுகவும் சென்னை உட்பட தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.




இந்நிலையில் மீண்டும் தினமலர் நாளிதழின் வேலூர் பதிப்பில் இலவச இணைப்பாக வெளிவருகிறது கம்ப்யூட்டர் இதழ். இணையதளம் ஒன்றில் பிரசுரமாகியிருந்த முகமது நபிகள் குறித்த கார்ட்டூனை அந்த “தினமலர் கம்ப்யூட்டர்’’ 02/09/08 நேற்று இதழில் பிரசுரித்திருந்தார்கள்.



தினமலரின் இந்த விஷமத்தால் ஒரு விஷயம் தெளிவாகிறது. இவ்வாறு வெளியிடுவது சர்சையைக் கிளப்பக் கூடும் என்பது தெளிவாக தெரிந்திருந்தும் , விஷமத்தனமாக இதனை செய்துள்ளது தினமலர்.


காலை 10.30 மணியளவில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வேலூர் தினமலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடனே கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம், தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் ஆகியவற்றுடன் அதிரடிப்படையினரும் போலீசாரும் அங்கு குவிக்கப் பட்டனர்.

முற்றுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்லச் சொன்னார்கள். பதிலுக்கு முற்றுகையிட்ட முஸ்லிம்கள் தினமலர் ஆசிரியரைக் கைது செய்தால் மட்டுமே இவ்விடத்தில் இருந்து அகலுவதாய் கூறினர்.
முற்றுகையிட்டோர் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதில் முஸ்லிம்கள் பலர் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். போலீசார் தடியடிப் பிரயோகம் செய்ததில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப் யாதவ், டி.ஐ.ஜி. சுந்தரமூர்த்தி, மேயர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்படவில்லை. மாவட்ட ஆட்சியரும், உயர் போலீஸ் அதிகாரிகளும் தினமலர் அலுவலகத்துக்குள் சென்று, நிர்வாகிகளிடம் பேசினர். நபிகள் நாயகம் பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்டவரை கைது செய்தால்தான் கலைந்து செல்வோம் என கூட்டத்தினர் உறுதியாக இருப்பது பற்றி தெரிவித்தனர். பிறகு, நபிகள் பற்றிய கார்ட்டூனை கொடுத்தவர் இவர்தான் என்று திலிபன் என்கிற ஊழியரை தினமலர் நிர்வாகிகள் போலீஸ் முன் நிறுத்தினர். அவரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். முஸ்லிம்கள் தரப்பில் 60 பேரைக் கைது செய்த போலீஸார் அன்று இரவே விடுதலையும் செய்தனர்.

முற்றுகையிட்ட முஸ்லிம்களை கட்டுக்குள் கொண்டு வர வேலூர் மாவட்டத் தலைவர் எஸ். தஸ்தகீர், மாவட்டச் செயலாளர் அஸ்லம் பாஷா, மாவட்டப் பொருளாளர் ஏஜாஸ் அஹமது, ஊலமா அணிச் செயலாளார் சம்சுன் நாசர் உமரி, மாவட்டத் துணைச் செயலாளர் ரஹ்மான் செரிப், நஜிர், முகம்மது அலி ஆகியோர் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பெரும் பாடு பட்டனர்.


அதேப் போல திருவண்ணாமலை செங்கம், சேலம், ஆம்பூர், ஓசூர் என பரவலாக நேற்று தினமலருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களையும், பல இடங்களில் கடை அடைப்புகளையும் செய்து முஸ்லிம்கள் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

முஸ்லிம்களின் புனிதமான நோன்புக் காலமான ரமலான் மாதம் தொடங்கியுள்ள நேரத்தில் தினமலர் இவ்வாறு நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்ட சம்பவம் தமிழக முஸ்லிம் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றும் பரவலாக தமிழகமெங்கும் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

Friday, August 29, 2008

மாண்பிழக்கலாமா மத்திய அமைச்சர்?

உலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத் தும் ஆண், பெண் என நேர் எதிர் இனங்களாகப் பார்க்கப்பட்டுள்ளன. உடல் அமைப்பின் ஒன்றோ டொன்று பொருந்தும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உயிரினங்கள் அனைத்தும் இந்த இயற்கை அடிப்படையில்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த இணைவு நிறுத்தப்பட்டால் பூமியில் வெறும் 100 ஆண்டுகளில் மனித இனம் அழிந்து விடும். ஓர் அருவி வீழ்கிறபோது நதியிலும் கலக்கலாம், சாக்கடையிலும் கலக்கலாம். ஆனால் எந்தக் 'கலப்பு' மக்கள் சமூகத்துக்கு நன்மையாக விளையும் என்பதே முக்கியம்.தற்போது, ஓரின சேர்க்கைக்கும் கூட ஆதரவுக்குரல் எழுந்து வருகிறது. சுமார் 20 ஆண்டு களுக்கு முன்னர், இந்த ஈனச்செயலை வெளியில் கூறவே அசிங்கப் படுவார்கள். அதில் ஈடுபடும் நபர்கள், சமூகத்தில் நடத்தைக் கெட்டவராக சித்தரிக்கப்பட்டார்கள். மேலும் இத்தகைய ஜென்மங்கள் அரிதாகவே இருந்து வந்தனர்.இன்று, இந்தக் கேவலத்திற்கு ஆதரவு திரட்டுவோர் படித்த அறிவாளி(?)களாகவும், மக்கள் மத்தியில் அறியப்பட்ட பிரபலங்களாகவும் இருப்பது அதிர்ச்சி யாக உள்ளது. குறிப்பாக தற்போது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வெளிப்படை யாகவே ஓரின சேர்க்கையை ஆதரித்துப் பேச ஆரம்பித்து விட்டார். ஓரினச் சேர்க்கைக்கு உள்ள சட்டரீதியான தடையை நீக்க வேண்டும் எனறு குரல் கொடுக்கிறார். நல்லவேளை இவர் சட்டத்துறை அமைச்சராக இல்லை.அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில்தான் ஆண்லி ஆண், பெண்லிபெண் இடையே நடக்கும் ஓரினச் சேர்க்கை இருந்து வந்தது. இதற்குக் காரணம் அந்நாடுகளில் வாழும் பெரும்பான்மையோர் 'ஒழுக்கம்' பேணுவ தில்லை. பலர் கடவுள் மறுப்புக் கொள்கை, சமய நம்பிக்கை மறுப்பு உடையவர்கள். கிருத்தவர்களும் வேதத்தை பின்பற்றத் தேவையில்லை, அப்படியே செயல்படுத்தவும் தேவையில்லை. பூமியில் செய்யும் பாவங்களுக்கு கடவுள் மீது கொள்ளும் நம்பிக்கை ஒன்றே போதுமானது என்று நினைப்பதால் இது போன்ற செயல்கள் அவர்களுக்கு குற்றமாகத் தெரிவ தில்லை.மேற்கத்திய நாடுகளில் குடும்ப வாழ்க்கையின் மீதான மதிப்பீடுகள் அழிந்து போனதற்கு இந்த ஓரினச் சேர்க்கை செயலும் ஓர் காரணம். திருமணத்திற்கு முன்பே, 13 வயதில் இருந்தே அவர்கள் மத்தியில் இந்தப் பழக்கம் வந்து விடுவதால் சமூக மதிப்புக்காகவும், வாரிசுக்காகவும் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களுக்கு குடும்பம் என்ற அமைப்பு தேவைப்படாமல் போகிறது. 20 ஆண்டுகட்டு முன்னர் தமிழகத்தில் தினசரி பத்திரிக்கைகளில் அமெரிக்காவில் நடந்ததாக சில செய்திகள் இடம்பெறும். பிரபல நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் இந்தப் பட்டியலில் குற்றம்சாட்டப்பட்டார்கள். பின்னர் இங்கும் இதுபற்றிய பேச்சுக்கள் புழங்கத் தொடங்கின. கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு சேர்க்கும் நிகழ்வுகள் மெல்ல மெல்ல ஊடுருவி மக்களின் உணர்வுகளை அதற்குத் தோதாக பக்குவப்படுத்தினர் என்றே கூற வேண்டும்.
ஓரினச் சேர்க்கையால் திருமணத்திற்கு முன்பே சக்தி இழந்துவிடுவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறு கிறார்கள். எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்கள் வர இந்த ஓரினச் சேர்க்கையும் காரணமாகிறது.இத்தகைய செயலில் சக்தியை இழந்து விடும் ஆண்களின் குடும்பங்களில்தான் கள்ளக்காதல் கலகங்கள் ஏற்படுகின்றன. இன்று அதற்கு சட்ட ரீதியான அனுமதிக்கு ஒரு மத்திய அமைச்சரே கோரிக்கை வைப்பது அவமானகரமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. பிரதமரோ, வேறு அமைச்சர் களோ, ஏன் அன்புமணி ராமதாஸின் தந்தையான மருத்துவர் ராமதாúஸா இதனைக் கண்டிக்கவில்லை. தமிழக முதல்வரும் மௌனம் காக்கிறார். இது உண்மையில் இந்த சமூகத்தை ஆண்மையற்ற சமூகமாக்கும் திட்டம்தான். ஓரினச் சேர்க்கை குறித்து திருமறையில் இறைவன் கண்டிக்கிறான். லூத் என்ற இறைத்தூதரின் சமுதாயத் தினர் இச்செயலை செய்த போது, இறைவன் அவர்களை அழித்து விட்டதாக கூறுகிறான்.சமூக ஆர்வலர்கள், மனித உரிமை போராளிகள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும். இதுபோன்ற இழிவான செயலில் ஈடுபடுவோருக்கு இவ்வுலகில் பல துன்பங்களும் அழிவுகளும் ஏற்படு வதோடு நாளை மறுமையிலும் கடும் தண்டனைக் கிடைக்கும். இதற்காகவே நமக்கு முன் வாழ்ந்த சமுதாயமான லூத் (அலை) அவர்களின் சமுதாயம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட போது அச்சமுதாயம் அழிந்ததை திருக்குர்ஆன் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.''நம்முடைய கட்டளை வந்ததும், அவர்களுடைய ஊரின் மேல் பகுதியை அதன் கீழ் பகுதியாக (தலைகீழாக) ஆக்கிவிட்டோம்; அன்றியும் (அதற்கு முன்னர்) அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையாகப்) பொழியச் செய்தோம். ஆகவே, (பொழியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றும்) உம் இரட்சகனால் அடையாளமிடப்பட்டதாக இருந்தது. (புரட்டப்பட்ட) அ(வ்வூரான)து இந்த அநியாயக் காரர்களுக்கு வெகுதூரமானது அல்ல.''(அல்குர்ஆன் 11:82,83)

சோர்ஸ்:TMMK