Friday, August 29, 2008

மாண்பிழக்கலாமா மத்திய அமைச்சர்?

உலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத் தும் ஆண், பெண் என நேர் எதிர் இனங்களாகப் பார்க்கப்பட்டுள்ளன. உடல் அமைப்பின் ஒன்றோ டொன்று பொருந்தும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உயிரினங்கள் அனைத்தும் இந்த இயற்கை அடிப்படையில்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த இணைவு நிறுத்தப்பட்டால் பூமியில் வெறும் 100 ஆண்டுகளில் மனித இனம் அழிந்து விடும். ஓர் அருவி வீழ்கிறபோது நதியிலும் கலக்கலாம், சாக்கடையிலும் கலக்கலாம். ஆனால் எந்தக் 'கலப்பு' மக்கள் சமூகத்துக்கு நன்மையாக விளையும் என்பதே முக்கியம்.தற்போது, ஓரின சேர்க்கைக்கும் கூட ஆதரவுக்குரல் எழுந்து வருகிறது. சுமார் 20 ஆண்டு களுக்கு முன்னர், இந்த ஈனச்செயலை வெளியில் கூறவே அசிங்கப் படுவார்கள். அதில் ஈடுபடும் நபர்கள், சமூகத்தில் நடத்தைக் கெட்டவராக சித்தரிக்கப்பட்டார்கள். மேலும் இத்தகைய ஜென்மங்கள் அரிதாகவே இருந்து வந்தனர்.இன்று, இந்தக் கேவலத்திற்கு ஆதரவு திரட்டுவோர் படித்த அறிவாளி(?)களாகவும், மக்கள் மத்தியில் அறியப்பட்ட பிரபலங்களாகவும் இருப்பது அதிர்ச்சி யாக உள்ளது. குறிப்பாக தற்போது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வெளிப்படை யாகவே ஓரின சேர்க்கையை ஆதரித்துப் பேச ஆரம்பித்து விட்டார். ஓரினச் சேர்க்கைக்கு உள்ள சட்டரீதியான தடையை நீக்க வேண்டும் எனறு குரல் கொடுக்கிறார். நல்லவேளை இவர் சட்டத்துறை அமைச்சராக இல்லை.அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில்தான் ஆண்லி ஆண், பெண்லிபெண் இடையே நடக்கும் ஓரினச் சேர்க்கை இருந்து வந்தது. இதற்குக் காரணம் அந்நாடுகளில் வாழும் பெரும்பான்மையோர் 'ஒழுக்கம்' பேணுவ தில்லை. பலர் கடவுள் மறுப்புக் கொள்கை, சமய நம்பிக்கை மறுப்பு உடையவர்கள். கிருத்தவர்களும் வேதத்தை பின்பற்றத் தேவையில்லை, அப்படியே செயல்படுத்தவும் தேவையில்லை. பூமியில் செய்யும் பாவங்களுக்கு கடவுள் மீது கொள்ளும் நம்பிக்கை ஒன்றே போதுமானது என்று நினைப்பதால் இது போன்ற செயல்கள் அவர்களுக்கு குற்றமாகத் தெரிவ தில்லை.மேற்கத்திய நாடுகளில் குடும்ப வாழ்க்கையின் மீதான மதிப்பீடுகள் அழிந்து போனதற்கு இந்த ஓரினச் சேர்க்கை செயலும் ஓர் காரணம். திருமணத்திற்கு முன்பே, 13 வயதில் இருந்தே அவர்கள் மத்தியில் இந்தப் பழக்கம் வந்து விடுவதால் சமூக மதிப்புக்காகவும், வாரிசுக்காகவும் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களுக்கு குடும்பம் என்ற அமைப்பு தேவைப்படாமல் போகிறது. 20 ஆண்டுகட்டு முன்னர் தமிழகத்தில் தினசரி பத்திரிக்கைகளில் அமெரிக்காவில் நடந்ததாக சில செய்திகள் இடம்பெறும். பிரபல நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் இந்தப் பட்டியலில் குற்றம்சாட்டப்பட்டார்கள். பின்னர் இங்கும் இதுபற்றிய பேச்சுக்கள் புழங்கத் தொடங்கின. கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு சேர்க்கும் நிகழ்வுகள் மெல்ல மெல்ல ஊடுருவி மக்களின் உணர்வுகளை அதற்குத் தோதாக பக்குவப்படுத்தினர் என்றே கூற வேண்டும்.
ஓரினச் சேர்க்கையால் திருமணத்திற்கு முன்பே சக்தி இழந்துவிடுவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறு கிறார்கள். எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்கள் வர இந்த ஓரினச் சேர்க்கையும் காரணமாகிறது.இத்தகைய செயலில் சக்தியை இழந்து விடும் ஆண்களின் குடும்பங்களில்தான் கள்ளக்காதல் கலகங்கள் ஏற்படுகின்றன. இன்று அதற்கு சட்ட ரீதியான அனுமதிக்கு ஒரு மத்திய அமைச்சரே கோரிக்கை வைப்பது அவமானகரமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. பிரதமரோ, வேறு அமைச்சர் களோ, ஏன் அன்புமணி ராமதாஸின் தந்தையான மருத்துவர் ராமதாúஸா இதனைக் கண்டிக்கவில்லை. தமிழக முதல்வரும் மௌனம் காக்கிறார். இது உண்மையில் இந்த சமூகத்தை ஆண்மையற்ற சமூகமாக்கும் திட்டம்தான். ஓரினச் சேர்க்கை குறித்து திருமறையில் இறைவன் கண்டிக்கிறான். லூத் என்ற இறைத்தூதரின் சமுதாயத் தினர் இச்செயலை செய்த போது, இறைவன் அவர்களை அழித்து விட்டதாக கூறுகிறான்.சமூக ஆர்வலர்கள், மனித உரிமை போராளிகள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும். இதுபோன்ற இழிவான செயலில் ஈடுபடுவோருக்கு இவ்வுலகில் பல துன்பங்களும் அழிவுகளும் ஏற்படு வதோடு நாளை மறுமையிலும் கடும் தண்டனைக் கிடைக்கும். இதற்காகவே நமக்கு முன் வாழ்ந்த சமுதாயமான லூத் (அலை) அவர்களின் சமுதாயம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட போது அச்சமுதாயம் அழிந்ததை திருக்குர்ஆன் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.''நம்முடைய கட்டளை வந்ததும், அவர்களுடைய ஊரின் மேல் பகுதியை அதன் கீழ் பகுதியாக (தலைகீழாக) ஆக்கிவிட்டோம்; அன்றியும் (அதற்கு முன்னர்) அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையாகப்) பொழியச் செய்தோம். ஆகவே, (பொழியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றும்) உம் இரட்சகனால் அடையாளமிடப்பட்டதாக இருந்தது. (புரட்டப்பட்ட) அ(வ்வூரான)து இந்த அநியாயக் காரர்களுக்கு வெகுதூரமானது அல்ல.''(அல்குர்ஆன் 11:82,83)

சோர்ஸ்:TMMK

No comments: