பதில்: முதலாவது, ஜமாஅத்துகள் அல்லது பள்ளிவாசல்கள் தோறும் ஆரம்பக் கல்விக்கூடங்களை உருவாக்குவது. இரண்டாவது, தொகுதி அல்லது தாலுகா வாரியாக 'பைத்துல்மால்'களை உருவாக்குவது. இவையிரண்டும் மிக முக்கிய பணிகளாகும். கல்வி மேம்பாடு, வறுமை ஒழிப்பு இவையிரண்டும்தான் மிகமுக்கிய சேவைகளாகும். மூன்றாவது, சமுதாய அமைப்புகள் விமர்சனங்களை தவிர்த்துக் கொண்டு அவரவர் பாதையில் பணியாற்றுவது. இதன்மூலம் சமூகத்தில் குழப்பமும், வீண் மோதல்களும் தவிர்க்கப்படும். இதுகுறித்து அனைத்து அமைப்புகளும் பரந்த மனதுடன் சிந்திக்க வேண்டும்.
சாதிக் அலி, மலேசியா
கேள்வி: தான் பிரதமராவதை ஜீரணிக்க முடியாமல் பாஜகவும் காங்கிரசும் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் நாடகமாடி விட்டதாக மாயாவதி குற்றம்சாட்டியுள்ளாரே?
பதில்: இந்த கூற்றில் உண்மை இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆட்சிக் கவிழ்ந்தால்..., அதனால் ''தான்'' மட்டுமே பயனடைய வேண்டும் என்று அத்வானி கருதினார். மதச்சார்பு அமைப்பு மதச்சார்பற்ற அமைப்பு என இரு அணிகள் இருந்தால்தான் சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யலாம். மூன்றாவது அணி வலுப்பெற்றால் தனது பலம் சிதறும் என காங்கிரஸ் கட்சி கருதியது. இரு கட்சிகளிலும் இருக்கக்கூடிய ஆதிக்க சக்திகள் ஒரு தலித், தன்னெழுச்சியோடு பிரதமர் பதவி அடைவதை மொத்தமாகவும், சுத்தமாகவும் விரும்பவில்லை. அந்த வகையில் மாயாவதியின் கூற்றை நிராகரிக்க முடியாது.
இது ஒருபுறமெனில், மாயாவதி ஒன்றும் காங்கிரஸ், பாஜகவை விட நேர்மையான தலைவரும் அல்ல. அம்பேத்கரின் சிந்தனைகளும், கன்ஷிரா மின் போர்க்குணமும் அவரிடமிருந்து எப்போதோ காணாமல் போய்விட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
எஸ். அஜ்மல்கான், சென்னை-14
கேள்வி: நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்கும்படி திமுகவை தமுமுக நிர்பந்தப்படுத்தியதாக சொல்லப் படுகிறதே...?
பதில்: தமுமுக சார்பில் நமது கோரிக்கையை அன்று கடிதமாக திமுக தலைமைக்கு அளித்தோம். அவர்கள் அதை ஏனோ பரிசீலிக்கவில்லை. குறைந்தபட்சம் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் சில மாற்றங் களை செய்ய வேண்டும் என்ற அளவிலாவது பிரதமர் மன்மோகன் சிங்கை திமுக தலைமை வற்புறுத்த வேண்டும். வட்டார நலனை விட பரந்து பட்ட தேச நலனும், சர்வதேச பார்வையும் திமுகவிடம் உண்டு என்பதற்கு கடந்த கால உதாரணங்கள் உண்டு. இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் காயிதேமில்லத் தின் வழிதான் தங்கள் வழி என்று அண்ணா அறிவித்தார். சீனப் போருக் காக, திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டார்.
இத்தகைய பார்வையுடன் உருவாக்கப் பட்டது தான் திமுக, இன்று இந்திய நாடு அமெரிக்காவிடம் அடமானம் வைக்கப் படாமல் காப்பாற்றும் கடமை தனக் குள்ளது என்பதை உணரவேண்டும்.
எஸ். அப்துல் ரஹ்மான், கீழக்கரை
கேள்வி: சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை அவரது நிலைபாட்டிற் காக மீடியாக்கள் ஒருபுறம் பாராட்டு கிறது, ஆனால் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிவிட்டார் என்று கூறி கம்யூனிஸ்டு கள் அவரை கட்சியிலிருந்து வெளி யேற்றி இருக்கிறார்கள். இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது?
பதில்: கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பதவிக்கான கண்ணியத்தை சோம்நாத் சாட்டர்ஜி, 40 வருட நட்புகளையும் மீறி காப்பாற்றி இருக்கிறார். அப்படிப்பட்ட நியாயமானவர் கட்சிக் கட்டுப்பாடுகளை உடைக்கும் போது 40 வருட சேவையை விட கட்சியின் நலனே முக்கியம் என சி.பி.எம். தலைமை தங்கள் நிலைபாடு களை காப்பாற்றி இருக்கிறது. கண்ணிய மான ஒரு தலைவரையும், கட்டுப்பாடான ஒரு கட்சித் தலைமையையும் இந்திய மக்கள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.
இதில் யார் பக்கம் நியாயம் என்பதை விட, இருதரப்பும் தாங்கள் ஏற்றுக் கொண்ட கடமையில் கொள்கையில் சமரசம் செய்யாதிருப்பதை பாராட்டியே ஆகவேண்டும்.
இரா.சங்கர், மேடவாக்கம்
கேள்வி: பெங்ளூரிலும்-அஹமதா பாத்திலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகளினால் முஸ்லிம் சமுதாயம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டுள்ளதே...?
பதில்: நடைபெற்ற குண்டுவெடிப்புகள் கண்டிக்கத்தக்க பயங்கரவாதம் மட்டுமல்ல, கோழைத்தனமானதும் கூட. முஸ்லிம் அமைப்புகள், தலைவர்கள், அறிவுஜீவிகள் மட்டுமல்ல, மார்க்க அறிவும் பொறுப்புணர்வும் கொண்ட ஒவ்வொரு இந்திய முஸ்லிமும் வெளிப்படையாக பயங்கரவாதத்தை எதிர்க்கிறார்கள். அகமதாபாத்திலும், பெங்களூரிலும் குண்டுவெடிப்புகள் நடைபெற்றபோது அந்நகரங்களில் உதவி செய்வதற்காக ஓடித்திரிந்த முஸ்லிம்களின் உணர்வுகளை பலரும் ஏனோ அறிய வில்லை.
குண்டுவெடிப்பு குறித்த முறையான விசாரணை தொடங்கப்படாமலேயே சிமி, லஷ்கர், இந்தியன் முஜாஹிதீன், அஹ்லே ஹதீஸ் என பல அமைப்புகளின் பெயர் களை வெளியிடுபவர்கள், பகிரங்கமாக துப்பாக்கி பயிற்சி எடுக்கும் காவி பயங்கரவாத அமைப்புகளைப் பற்றி ஏனோ சிந்திக்கக்கூட மறுக்கிறார்கள்.
யாரோ சில தறுதலைகள் குற்றமி ழைக்க அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாத நிலையில், முஸ்லிம் சமூகம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறுவது சரியல்ல, கண்டிக்கத்தக்கது. பொறுப்புணர்வற்ற பத்திரிக்கைகளும் உளவுத்துறையில் இருக்கும் ஒரு சிலரும் தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள். அப்படியே ஒரு வாதத்திற்காக ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக கைது செய்யப்பட்டாலும் அதற்கும் 20 கோடி இந்திய முஸ்லிம்கள் எப்படி பொறுப்பேற்பார்கள்?
அத்வானி பாபர் மசூதியை இடித்ததற்காக 80 கோடி இந்துக்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்பது எப்படி தவறோ, அதேபோல்தான் இதுவும் தவறு என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கே. அகமது சமீம், மண்ணடி
கேள்வி : பெங்களூர் அஹமதாபாத் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தமிழகத்தில் சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர். இது திட்டமிட்ட நாடகம் என்றும், மதுரையில் எம்.என்.பி. நடத்தவிருக்கும் சுதந்திர தின அணி வகுப்பைத் தடுக்க நடக்கும் முன் நாடகம் என்றும் சொல்லப்படுகிறதே...?
பதில்: எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்குத் தெரியும்? பொத்தாம் பொதுவாகப் பேசிவிட்டு செல்லக்கூடிய விஷயமல்ல இது. கவனமாகவும் லி நுட்பமாகவும் ஆராயப் பட வேண்டும். சந்தேகத்தில் கைது செய்து விசாரிப்பது என்பது வேறு, பொய்ப்பழி சுமத்தி பிரச்சனையை திசைதிருப்புவது என்பது வேறு. தமிழகக் காவல்துறையிலும் உளவுத்துறையிலும் இருக்கும் பெரும்பா லோர் நேர்மையானவர்களே. ஆனால் அவர்கள் வீண் பரபரப்புக்கு இடம் கொடுக்காமல் பணியாற்ற வேண்டும். ஜனநாயகப் பாதைக்கு வருவோரையும், ஜனநாயக வழியிலான அவர்களது பணிகளையும் கெடுக்கக்கூடாது. அதற் காக தமிழகத்தில் கைது படலங்கள் நடப்பதாக வரும் செய்திகள் நிரூபிக்கப் பட்டால், அது கடும் கண்டனத்திற்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாகும்.
சர்ப்ராஸ், அண்ணா நகர், சென்னை
கேள்வி : சமீபத்திய நமது பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுகளில் உங்கள் மனதை மிகவும் பாதித்தது எது?
பதில்: சென்ற மாத மத்தியில், ஜப்பானில் ஜி 8 நாடுகளின் மாநாட்டில் பங்குக் கொள்வதற்காக நமது பிரதமர் மன்மோகன் சிங் சென்றிருந்தார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ஜூலை 16 அன்று பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் சொன்னவை நமது மனதை மட்டுமல்ல மனிதநேயமுள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தையும் ரணகளமாக்கியிருக்கும்.
''இந்தியாவும் அமெரிக்காவும் தலை நிமிர்ந்து தோளோடு தோள் நிற்க வேண்டும், அது தான் நடைபெற போகின்றது.''
லி இது தான் பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பானில் உள்ள ஹோக்க ஹைடோ நகரத்தில் கடந்த ஜூலை 9 அன்று தெரிவித்த கருத்து. இந்தக் கருத்தை அவர் வெளியிட்ட போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் அருகில் நின்றிருந்தார். ஜார்ஜ் புஷ்ஷின் உள்ளத்தை குளிர வைப்பதற்காக நமது பிரதமர் சொன்ன இந்த வார்த்தைகள் நியாயவான்கள் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் ரணகளமாக்கியுள்ளது. இதற்கு ஒரு படி மேலே சென்று இந்திய மக்களில் சிந்தனை திறன் படைத்தவர் களும் இதே கருத்தில் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய உலக சூழலைக் கருத்தில் கொள்ளாமல், பொறுப்புணர்வு இல்லாமல் சொல்லப்பட்டவை தாம் பிரதமரின் கருத்துகள். அமெரிக்கா வுடன் இந்தியா தோளோடு தோள் நிற்ப தாக சொல் முடித்த சில கணங்களில் அமெரிக்க விமானம் வீசிய குண்டு ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கு கொண் டிருந்த 41 பேரின் உயிரை பறித்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவார்கள். 2003ல் தொடங்கி பிரதமர் பேசிய ஜூலை 9 வரை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் ஈராக்கில் 12,36,604 மக்கள் உயிர் இழந்துள்ளார்கள். அமெரிக்காவின் இந்த பாவச் செயல் இந்தியா தோளோடு தோள் நிற்கின் றதா? பாலஸ்தீனத்தில் அன்றாடம் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் கொடுமை களுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகின்றது. இந்த அராஜகத் திலும் அமெரிக்காவிற்கு இந்தியா தோள் கொடுக்கின்றதா?
இந்தியாவில் வாழும் தெளிவான சிந்தனை ஆற்றல் உள்ள எந்தவொரு மனிதனும் பிரதமரின் கூற்றை ஏற்றுக் கொள்ள மாட்டான். ஜார்ஜ் புஷ் முன்னிலையில் நமது பிரதமர் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொரு இந்தியனை யும் தலைகுனிய வைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment