Saturday, November 22, 2008

டிசம்பர் 6-ல் ரயில் மறியல் போராட்டம்! இந்தியா முழுதும் போராட்டத்தை விரிவுப்படுத்த முயற்சி!!தலைமைக் கழகம் அறிவிப்பு!!போர்கால அடிப்படையில் பணிகள் தொடக்க


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு நவம்பர் 7 அன்று சென்னையில் நடை பெற்றது. பேராசியர் டாக்டர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலை மையில் நடைபெற்ற தலைமை நிர்வாகி களும், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச் செயலாளர்களும் கலந்துக் கொண்டனர்.


இதில் டிசம்பர் 6-ல் என்ன வகையான போராட்டத்தை அறிவிப்பது என்று ஆலோ சிக்கப்பட்டது. பல்வேறு ஆலோசனை களில் இறுதியாக ரயில் மறியல் போராட்டத்தை வீரியத்தோடு நடத்து வது என்று முடிவு செய்யப்பட்டது.


மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் போராட்டங்கள் நடத்துவது என்றும் ரயில்கள் செல்லும் ஊர்களில் மறியல் நடத்துவது என்றும், ரயில்கள் இயங்காத இடங்களில் ரயில் நிலையங்கள் செயல்பட்டால் அங்கு முற்றுகைப் போராட்டமாக மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதோடு, பாபர் மஸ்ஜித் போராட் டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்றும் முயற்சியாக, கடந்த 2004 - டிசம்பர் 6-ல் தமுமுக டெல்லியில் பேரணி - மாநாடு நடத்தியதைப் போல, இவ்வருடமும் இந்தியா முழுவதும் போராட்டத்தை விரி வுப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப் படையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தோழமை முஸ்லிம் அமைப்பு களுக்கு கடிதம் எழுதி, அந்தந்த மாநில தலை நகரங்களில் அவர்களின் சக்திகேற்ப போராட்டத்தை நடத்த அறிவுறுத்து வது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கான சுவர் விளம் பரங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட் டிகள், தெருமுனைப் பிரச் சாரங்கள், வாகன ஒலிபெருக்கி பிரச் சாரங்கள், களப் பணி ஆகியவற்றை போர்கால அடிப்படை யில் தொடங்கிட வேண்டும் என இயக்க தோழர் களை தலைமைக் கழ கம் வலியுறுத்தியுள்ளது.
டிசம்பர் 6 ரயில் மறியல் போராட்டம் விளம்பரங்களை எழுச்சியுடன் செய்ய வேண்டும் என்றும், உடனடியாக பணி களை தொடங்க வேண் டும் என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.


(அறிவிக்கப்ட்ட 24 மணி நேரத்தில் சுவர் விளம்பரத்தில் முந்திக் கொண்டது திருச்சி மாநகரம்)

இந்த அறிவிப்பு தமுமுக சகோதரர் களையும் சமுதாய ஆர்வலர்களையும் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தி; அவர் களை வீரியமும், உற்சாகமும் கொள்ள வைத்திருக்கிறது என பல முனை தகவல்களும் தெரிவிக்கின்றன.

No comments: