
உ.பி. யைச் சேர்ந்த சாமியார் லட்சுமி சங்கர் ஆச்சாரியா, இவர் விசுவ இந்து பரிசத் அமைப்பில் தீவிர உறுப்பினராகவும் பிரச்சாரகராகவும் செயல்பட்டு வந்தார். பிறகு மனம் திருந்தி அந்த அமைப்பில் இருந்து விலகி விட்டார். இஸ்லாம் தீவிர வாதமா அல்லது சாந்தியா? என்ற தலைப்பில் இவர் இந்தியில் ஒரு நூல் எழுதியுள்ளார். இந்த நூலில் இஸ்லாம் அமைதியை நிலைநாட்டும் மார்க்கம் என்பதை தெளிவாக அவர் எடுத்துக் காட்டியுள்ளார். விரைவில் வெளிவரவுள்ள அந்த நூலின் பிரதியை தமுமுக தலைவரிடம் லக்னோ அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில் அளித்தார். அருகில் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் சுலைமான் (வலது புறம்) உள்ளார்.
No comments:
Post a Comment